Friday, February 26, 2010

அசத்தும் கையேடு(http://kaiyedu.blogspot.com)




















மணற்கேணி 2009 போட்டியின் "தமிழ் அறிவியல்" பிரிவின் வெற்றியாளர் "திரு.இரா.இரஞ்சித்" அவர்களை தமிழ்வெளி மற்றும் சிங்கை வலைப்பதிவர்களின் சார்பாக வாழ்த்துகிறோம்.

போட்டியில் வெற்றி பெற்ற எங்களது சக வலைபதிவர் , எங்களது இனிய நண்பர் இரா.இரஞ்சித் அவர்களை வாழ்த்துகிறோம்.



Thursday, February 25, 2010

முகம் பார்க்கும்

உட்கருத்து புரிந்து போன கதைகள் கவிதைகள் நிகழ்வுகள் தொடர்ச்சியாக பார்ப்பது படிப்பது கடினம்.

நாம் படிப்பதற்கு உரிய கதைகள் கவிதைகள் தான் எவை?

பார்க்க தகுந்த வேறு மாதிரியான நிகழ்வுகள் என்ன? என்ற தேடுதலில் வியப்பை அளிக்கும் மையகருத்துகள் புதிய உணர்ச்சியை உண்டுபண்ணும் உணர்வாக நம்முள் முகம் காட்டி நிற்கும்.

டேய் என்ன புடிடா கருப்பா... என்று ஒருவன் கத்தினான்.

குளத்தினுள் விளையாடி கொண்டிருந்த பத்து பதினைந்து சிறார்களில் ஒருவன் . கருப்பா என்கிற கருப்புசாமி நீந்த தொடங்கினான்.

கத்தியவன் உள்ளுக்குள் முழ்கி காணாமல் போனான்.

கருப்பு தேடினான்.

இரண்டுநிமிடங்கள் ஆனது வேறொரு இடததில்வெளிவந்தான்.

டேய் கருப்பு அங்கே பாரு..டேய் கருப்பு.. ஒரு சேர கத்தினார்கள்.

கழுத்து திருப்பி முகம் பார்க்கும் வினாடியில் முழ்கி போனான். முழ்கிய இடத்தில் வட்டமாய் அலைகள் கிளம்பியது.

சிறார்களின் சந்தோச கத்தல்கள் குளம் குழம்பியது.

LinkWithin

Related Posts with Thumbnails