Showing posts with label மகிழ்ச்சி. Show all posts
Showing posts with label மகிழ்ச்சி. Show all posts

Monday, November 08, 2010

இது எங்கள் தீபாவளி.

மாடும் மனிதரும் குளிக்கும் பொதுகுளத்தில்  எண்ணெய் தேய்த்து குளித்தலில் தொடங்கிய      தீபாவளி.

குளத்து அரசமரத்தடியில்  மிக்சர்  பாக்கெட் ஒருபீர் ஒரு குவாட்டர்ரெண்டு காளி பிளாஸ்டிக் டம்ளர் மூன்று வாட்டர்பாக்கெட்  பல் இளித்த   எங்கள்  ஊரில் வசிக்கும் ராஜ கம்பளத்தார் பையன்கள்.

அறிமுகம் ஆனாதல்   எண்ணா  இன்னிக்கு     தீபாவளி அதான் காலையிலே ?

நீ குடிக்கிறியா?

  பதில் சொல்லாது  பல் இளித்தலுடன் நான்.

குடிச்ச பாட்டில  ஒடைச்சு போடாது ஓரமா போட்டுட்டு போங்க  என்ற ஒரு வேண்டுகோளுடன்  விடுவித்து   கொள்ள
அப்புறம் என்ன செய்தார்கள் என்று தெரியாது வீடு நோக்கிய பயணம்.

எங்கள் வீட்டிலும்  தீபாவளி  தெரிய  கடமைக்கு வெடித்த பட்டாசுகள்  பட….ப்பட..பட  என  வெடித்தலில் குறை  இல்லை தான்.

வாழை  இலை பரப்பி வைத்த  எண்ணெய் பலகாரங்கள்  ஒதுக்கி இட்லியை ம ட்டும்   உட்கொண்டு எழுந்திருக்க  

ஏன் பலகாரம் பிடிக்கலையா ?  என வீட்டாரின் பதிலுக்கு இன்றைக்கு எதுவும் பிடிக்காது  என்று சொல்லி இடம் நகர்ந்தேன்.

நண்பர்களுக்கு போன் செய்து ஓர் இடம் கூடச்சொல்லி வண்டிக்கு இருவராய்  பக்கத்து  ஊரில் உள்ள பிரசித்த பெற்ற  கோவிலுக்கு   சென்று அரட்டை அடித்தது. 


மதிய சாப்பாட்டிற்குள் திரும்பி அவர் அவர்  வீட்டிற்கு  செல்ல  மாலையில் இங்கு கூடுவோம் என்று ஒரு நண்பர் கடையை குறிப்பிட்டு விட்டு  கலைந்தோம்.





இரவு  7.30 நண்பர் கடையில் ஒன்று கூடி டீ குடித்து  நண்பர் கொண்டு வந்த மத்தாப்பு  அயிட்டங்களை  ஆளக்கொன்றாய்  பத்த  வைத்த மத்தாப்புகள்  எங்கள்    தீபாவளி ஹைலைட்.

இரவு பத்து மணி   வரை அரட்டை பேசி   கலைந்ததுடன்  எங்கள் தீபாவளி முடிவு பெற்றது.

Thursday, February 25, 2010

முகம் பார்க்கும்

உட்கருத்து புரிந்து போன கதைகள் கவிதைகள் நிகழ்வுகள் தொடர்ச்சியாக பார்ப்பது படிப்பது கடினம்.

நாம் படிப்பதற்கு உரிய கதைகள் கவிதைகள் தான் எவை?

பார்க்க தகுந்த வேறு மாதிரியான நிகழ்வுகள் என்ன? என்ற தேடுதலில் வியப்பை அளிக்கும் மையகருத்துகள் புதிய உணர்ச்சியை உண்டுபண்ணும் உணர்வாக நம்முள் முகம் காட்டி நிற்கும்.

டேய் என்ன புடிடா கருப்பா... என்று ஒருவன் கத்தினான்.

குளத்தினுள் விளையாடி கொண்டிருந்த பத்து பதினைந்து சிறார்களில் ஒருவன் . கருப்பா என்கிற கருப்புசாமி நீந்த தொடங்கினான்.

கத்தியவன் உள்ளுக்குள் முழ்கி காணாமல் போனான்.

கருப்பு தேடினான்.

இரண்டுநிமிடங்கள் ஆனது வேறொரு இடததில்வெளிவந்தான்.

டேய் கருப்பு அங்கே பாரு..டேய் கருப்பு.. ஒரு சேர கத்தினார்கள்.

கழுத்து திருப்பி முகம் பார்க்கும் வினாடியில் முழ்கி போனான். முழ்கிய இடத்தில் வட்டமாய் அலைகள் கிளம்பியது.

சிறார்களின் சந்தோச கத்தல்கள் குளம் குழம்பியது.

LinkWithin

Related Posts with Thumbnails