அரியானா மாநிலம் அகெரா கிராமத்தை சேர்ந்தவர் இஜாஸ்கான். டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் படித்து கொண்டு இருந்த அவருக்கும் அரியானா மாநிலம் பரத்பூரை சேர்ந்த இலியாஸ் என்பவரின் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை பரத்பூரில் திருமணம் நடந்து முடிந்ததும் மருமகனுக்கு புதிததாக வாங்கிய மாருதி ஆல்ட்டோ காரின் சாவியை மாமனார் இலியாஸ் கொடுத்தார். அதற்கு இஜாஸ் ஸ்கார்ப்பியோ காரும் ரூ.15 லட்சம் பணமும் தந்தால் தான் வாங்குவேன்.அதற்கு குறைந்து எதையும் வாங்க மாட்டேன் என்று கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மணப்பெண் உறவினர்களும் ஊர் மக்களும் இஜாசையும் அவரது தந்தையும் அடித்து உதைத்தனர். இருவரின் தலையையும் மொட்டை அடித்து பணய கைதியாக சிறை வைத்தனர்.
ஊர்பஞ்சாயத்து கூடி ரூ.8 லட்சம்பணம் தந்தால் தான் இருவரையும் விடுவிப்பது என்று முடிவு செய்தது. வேறு வழி இல்லாமல் ரூ.8 லட்சம் கொடுத்தது இருவரும் மீட்கப்பட்டனர். திருமணமும் முறிந்தது.
No comments:
Post a Comment