விருப்பப்படுவதை செய்வதற்கும் செய்வதை விரும்புவதற்கும் வித்தியாசம் உண்டு. செய்வதை விரும்பும் போது தேக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. விரும்புவதை மட்டுமே செய்யும்போதுதான் தேக்க நிலை ஏற்படும்.
பொதுவாகவே விரும்புவதை மட்டும் செய்யும் பழக்கம் நமக்கு அதிகம். அதே நேரத்தில் எது விருப்பமானது என்பதை தெரிந்து கொள்ளவே நீண்ட நாட்களாகி விடுகிறது. நாம் விரும்புவதும் கொஞ்ச நாட்களில் அலுத்துபோய் விடுகிறது.
எதுவாக இருந்தாலும் இருக்கும் நிலையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்ற வாக்கியத்தை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
-சுவாமி தாயனந்த சரஸ்வதி-
விரும்பி சாப்பிட்ட சாப்பாடு சங்கடத்த கொண்டு வந்தது.
விரும்பி விரும்பாமலோ சில செயல்களை சில நபர்களுக்கோ சில சந்தர்ப்பங்களுக்கோ உட்பட்டுதான் செய்தாக வேண்டும்.
இதயம் நல்லாருக்கும் வரையில் நம்முடைய நினைவுக்கு வருவதில்லை. நெஞ்சு வலி வந்தால்தான் இதயம் நினைவுக்கு வரும். மகிழ்ச்சி தெரியாது துன்பம் தெரியும்.
No comments:
Post a Comment