Showing posts with label அறிவியியல் செய்தி. Show all posts
Showing posts with label அறிவியியல் செய்தி. Show all posts

Friday, January 08, 2016

தாக்குதலுக்கு த்தயாராகும் ட்ரான்-புகைப்படசெய்தி

பொ்சியன் வளைகுடாவில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவதளத்திலிருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராக த்தாக்குதல் நடத்தத் தயாராகும் ஆள்இல்லாவிமானம்.



















Saturday, December 26, 2015

ஒட்டகசிவிங்கி டைவ்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிக்கோலஸ் டிவியாக்ஸ்  ஒன்றரைவருட உழைப்பில் உருவான இந்த அனிமேசன் படம் எப்படி உள்ளது என்று நீங்களும் பாருங்களேன்.


Thursday, December 24, 2015

ஒரு நிமிடம் தேனீ குஞ்சியின் முதல் 21 நாட்கள்

தேனீ முட்டையிலிருந்து குஞ்சு வரை முதல் 21 நாட்களின் அதனுடைய வாழ்க்கைமுறையை ச்சிறப்பாக புரிந்துகொள்ள ஆனந்த் வர்மா என்ற புகைப்பட கலைஞா் அவருடைய குழுவும் இணைந்து  ஒரு நிமிட காணொளியை உருவாக்கியுள்ளார்கள்.

காணொளி உங்களுக்காக...




அவரின்  பேச்சு TED TALKS-ல்


Tuesday, December 15, 2015

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பிளைட் A380

சான்பிரான்சிஸ்கோ டிசைனர் லூகா லக்கோனி ஸ்டீவர்ட் 1000 மணி நேரம் செலவழித்து மிக தத்துரூபமாக  A380 பிளைட்டை உருவாக்கியுள்ளார்.

நகரும் இருக்கை இயங்கும் சைடுகதவு எல்லாவற்றையும் 100 பேப்பர் கவர்  50 பிளேடு  ஒரு பாட்டில் ஒட்டும் திரவம் 3000 ஸ்டாப்ளர் பின் ஆகியவற்றைப்பயன்படுத்தி விமானத்தை உருவாக்கியுள்ளார்.

காணொளியை பாருங்க..













Monday, December 14, 2015

புள்ளங்களுக்கு இப்படியும் கணக்கு சொல்லி க்கொடுக்கலாமே...லெகே பயன்பாடு


நம் வீட்டு குழந்தைங்களுக்கு அவர்கள் விளையாட பயன்படுத்தும் லெகே(LEGO) வை வைத்து கணக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம்.

கூட்டல்,கழித்தல்,பெருக்கல் போன்ற அடிப்படை கணிதத்தை மிகவும் சுலபமாக கற்றுக்கொடுங்கள்.







Wednesday, December 02, 2015

லாரி ஏற்றியும் உடையாத மோட்டோ X FORCE கைப்பேசி

மோட்ரோலா நிறுவனம் மூன்று வருட ஆராய்ச்சி முடிவில் லாாி ஏற்றியும் உடையாத தொடு திரை கைப்பேசி  தயாரித்துள்ளது.

5.4 இன்ச்   தொடுதிரையின் அளவு 5 அடுக்குகளால் உருவாக்கப்பட்டது.

தூக்கி எறிந்தும் , லாரி ஏற்றியும் பரிசோதனை செய்துபார்ததில்   மோட்டோ கைப்பேசி உடையவில்லை.




Tuesday, December 02, 2014

செர்னோபில் இன்று

ஆள் அரவமற்ற மயான அமைதி.

செர்னொபில் அணுஉலை விபத்து நடந்த இடத்தில் இருந்து 30 கிமீ  சுற்றளவுக்கு மனிதர்கள் வாழ தகுதியற்ற சூழல்.

இன்னமும் குறையாத கதிரியிக்க வெளிப்பாடு...

இன்று


மேலும் அதிகம் தெரிந்துகொள்ள...
செர்னோபில் அணுஉலை விபத்து

Wednesday, February 06, 2013

இலக்கணபிழைகளை கண்டறியும் பேனா


இலக்கணபிழைகளையும் எழுத்து பிழைகளையும்கண்டறிந்து உணர்த்தும் பேனாவை ஜெர்மன் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது.

எழுதும்பொழுதுநாம் செய்யும் எழுத்துதவறுகளையும் இலக்கணதவறுகளையும் அதிர்வினால் காட்டிவிடும் .







மேலும் தெரிந்து கொள்ள..      lernstift

Thursday, December 20, 2012

எவரெஸ்ட் சிகரம்

477 புகைப்படங்களை இணைத்து உருவாக்கிய 2 பில்லியன் பிக்சல் உடைய இந்த புகைப்படம் ஆச்சரியமூட்டியது.

ரசிக்க....


http://www.dailymail.co.uk/sciencetech/article-2250676/Mount-Everest-The-incredible-interactive-BILLION-pixel-image-created-David-Breashears.html  இங்கே செல்லவும். 

Monday, December 27, 2010

தோல்விக்குப் பின்னால்... (பகிர்வு)


செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் பாதை மாறியதால், அது மண்ணில் விழுந்து யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக வானிலேயே வெடித்துச் சிதறும்படிச் செய்தனர் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆண்டு இரண்டாவது முறையாக ஜிஎஸ்எல்வி ராக்கெட் அனுப்புவதில் தோல்வியடைந்திருக்கிறோம்.
1979-ம் ஆண்டு முதலாக 7 முறை செயற்கைக் கோளுடன் ராக்கெட் ஏவப்பட்டு, நான்கு முறை தோல்வி அடைந்திருக்கிறோம். இத்தகைய தோல்விகள் வளர்ந்த நாடுகளிலும் ஏற்படுவது உண்டு. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது பெரிய இழப்பு. தற்போது விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டின் மதிப்பு ரூ. 125 கோடி. சென்ற ஏப்ரல் மாதம், பாதை தவறி கடலில் விழுந்த ராக்கெட்டின் மதிப்பு ரூ. 150 கோடி.
இதற்காக நம்பிக்கை இழந்து செயற்கைக்கோள்களை அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதல்ல அர்த்தம். இத்தகைய முயற்சிகளை நாம் நிறுத்த முடியாது,  நிறுத்தவும் கூடாது. இத்தகைய அறிவியல் சாதனைகள்தான் நம்மை உலக அரங்கில் தலைநிமிர வைக்கும். பொருளாதார வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் இத்தகைய அறிவியல் வளர்ச்சிதான் ஒரு வளரும் நாட்டுக்கு முக்கிய அடையாளம் என்பதை மறுக்க முடியாது.
ஏன் மீண்டும் மீண்டும் இத்தகைய தோல்வியை இந்தியா சந்திக்க நேர்கிறது என்பதை மிகத் துல்லியமாக, நுட்பமாக ஆய்வு செய்து கண்டறிய வேண்டியது மிகமிக அவசியம். இதற்காக இரண்டொரு நாளில் ஒரு குழுவை அமைத்து, ஆய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். கடந்த ஏப்ரல் 15-ம் தேதி ராக்கெட் விண்ணுக்குச் செலுத்தியபோதும் இத்தகைய குழு அமைக்கப்பட்டு அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டன. இருப்பினும்கூட இப்போது புதிதாக ஒரு தவறு ஏற்பட்டு, அதன் காரணமாக ஜிஎஸ்எல்வி ராக்கெட் செலுத்த முடியாமல் போயுள்ளது.
கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் நாம் தேவையான முன்னேற்றம் காணவில்லை என்பது வெளிப்படை. தற்போது நாம் விண்ணில் செலுத்திக்கொண்டிருக்கும் ராக்கெட்டுகளில் ரஷியாவிடம் பெற்ற கிரையோஜெனிக் இன்ஜின்கள் தான் பொருத்தப்பட்டிருந்தன. புவியீர்ப்பு விசையை மீறி, சுமார் 2000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏந்திச்செல்ல வேண்டுமானால், மண்ணிலிருந்து புறப்படும் வேகம் மிகமிக அதிகமாகவும், வீரியமாகவும் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற தொழில்நுட்பமாக கிரையோஜெனிக் இன்ஜின் அமைந்துள்ளது. இந்த முறையும் கிரையோஜெனிக் இன்ஜினை முடுக்கிவிடுவதில் ஏற்பட்ட கோளாறுதான் ராக்கெட் தோல்வியடைந்ததற்கு அடிப்படைக் காரணம் என்று கூறப்படுகிறது. சரியாக எந்த இடத்தில் தவறு நடந்துள்ளது என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை.
தற்போது ஜிஎஸ்எல்வி ராக்கெட் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தைக்  கண்டறிந்தாலும்கூட, முக்கியமான மூன்று விஷயங்களில் இந்தியாவுக்கு காலத்தால் பின்னடைவு நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் கருத்தில்கொண்டு, இந்த பிரச்னையை அணுக வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது.
முதலாவதாக, ஆராய்ச்சியாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பொறியியல் மாணவர்கள் எல்லோரையும் சம்பாதிக்கும் இயந்திரங்களாகத்தான் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மாற்றுகின்றன. நல்ல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் கல்வியை அளிப்பது இல்லை. இதையும் மீறி நல்ல ஆராய்ச்சியாளர்கள் உருவானால் அவர்களை ஊக்கப்படுத்தவும் ஆளில்லை.
கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் எங்கள் மாணவர் ஆண்டுக்கு இத்தனை லட்சம் ரூபாய் சம்பளத்துக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று விளம்பரம் செய்யும் அவலம்தான் கடந்த பத்து ஆண்டுகளில் உருவெடுத்திருக்கிறது. எங்கள் மாணவர் இஸ்ரோவில் சேர்ந்திருக்கிறார் என்றோ, டிஆர்டிஓ-வில் ஆராய்ச்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்றோ, கல்லூரி விரிவுரையாளராகச் சேர்ந்திருக்கிறார் என்றோ சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வதில்லை. கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் மட்டுமல்ல, அரசும் அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சிக்கு முன்னுரிமை கொடுப்பதை நிறுத்திவிட்டது.
இரண்டாவதாக, ஆராய்ச்சியாளர்களைவிட அரசியல்வாதிகள் முக்கியத்துவம் பெறுவது எல்லா நிலைகளிலும் ஏற்பட்டுவிட்டது. ஆராய்ச்சியாளர் நியமனங்களில்கூட, அமைச்சருக்கும் ஆட்சியாளர்களுக்கும் வேண்டியவர், தகுதியில் சற்று பின்தங்கியிருந்தாலும்கூட தேர்ந்தெடுக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்படும் இவர்கள்தான் சில ஆண்டுகளில் பதவி உயர்வு பெற்று, பொறுப்பான பதவிகளில் அமர்கிறார்கள். அப்போது இவர்களது திறமைக்குறைவு எல்லாவற்றின் மீதும் படிகிறது.
மூன்றாவதாக, ராக்கெட்டுகளை விண்ணில் ஏவும் இஸ்ரோ என்றாலும், புதிய பீரங்கிகளை உருவாக்கும் ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமானாலும் (டிஆர்டிஓ) தங்களுக்குத் தேவையான மிகச் சிறு கருவிகளையும் வெளியில் உள்ள பல்வேறு நிறுவனங்களிடம் அயல்பணி ஒப்பந்தம் மூலமாகவே பெறுகின்றன. இத்தகைய அயல்பணி ஒப்பந்தங்களில் ஈடுபடுத்தப்படும் ஒரு தொழிற்கூடம், தரத்தில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாத நேர்மையான தொழிற்கூடமாக இருந்தால் மட்டுமே, ஒட்டுமொத்த ஆராய்ச்சியும் பயனுறும். இதில் ஒரு சிறிய பாகத்தை தரக்குறைவான தொழிற்கூடத்திடம், அரசியல் நிர்பந்தம் அல்லது மேலதிகாரியாக இருக்கும் ஆராய்ச்சியாளரின் நிர்பந்தம் காரணமாக ஒப்பந்தம் கொடுத்து, செய்து வாங்கினால், இத்தகைய தோல்விகள் ஏற்படவே செய்யும்.
லாடம் சரியில்லாவிட்டால் குதிரை சரியாக ஓடாது. குதிரை சரியாக ஓடாவிட்டால் அதன் மீது அமர்ந்துள்ள ராணுவ வீரன் சரியாக சண்டையிட முடியாது. வீரன் சண்டையிட முடியாவிட்டால், போரில் தோல்வி தவிர்க்க முடியாதது. தரத்துக்கும் அறிவுக்கும் முன்னுரிமை தரப்படாவிட்டால் இதுபோன்ற தோல்விகளைத் தவிர்க்க இயலாது.


Thursday, October 21, 2010

அறிவியல் நேர்மை சம்பந்தப்பட்டது.

ரிச்சர்ட் ஃபெயின்மன் கால்டெக்-இல் 1974இல் செய்த சொற்பொழிவிலிருந்து. 'Surely You 're Joking, Mr. Feynman! ' புத்தகத்திலிருந்து. இறுதிப்பகுதி
இப்போது, இவைகளில் எது முக்கியமான இல்லாத விஷயம் என்பதை நான் சொல்லவேண்டும். ஆனால், தெற்கு கடல் தீவுகளில் இருப்பவர்களிடம் அவர்களது கார்கோ விமானதளங்களில் எதை மாற்றுவது மூலம் அவர்களது அமைப்புக்குள் செல்வம் வரும் என்று விளக்குவது போல கடினமானது. அவர்களது ஹெட்போன்களை எப்படி மாற்றவேண்டும் என்று விளக்குவது போல எளிதான விஷயமில்லை. ஆனால், இந்த வானத்திலிருந்து மூட்டை விழும் அறிவியல் சமாச்சாரங்களில் பொதுவாக இல்லாமல் இருக்கும் விஷயம் என்ன என்று விளக்கமுடியும். இதனை நாம் வெளிப்படையாகப் பேசாமல் இருந்தாலும், பல அறிவியல் பரிசோதனைகள் மூலம் நாம் இதனை உணர்ந்து கொள்ளலாம். இது முக்கியமாக அறிவியல் நேர்மை சம்பந்தப்பட்டது. உதாரணமாக, நாம் ஒரு பரிசோதனை செய்தால், இந்தப் பரிசோதனை முடிவு தவறாக இருக்கலாம் என்று நாம் நினைக்கக் தேவையான எல்லா சுற்றுப்புற விஷயங்களைப் பற்றியும் ஒன்றுவிடாமல் எழுதுவது. நாம் செய்த பரிசோதனை முடிவு சரியாக இருக்கிறது என்று நாம் நினைக்கத் தேவையான விஷயங்களைப் பற்றி மட்டும் எழுதுவதல்ல. எப்படி அந்த பரிசோதனை வேலை செய்தது என்பதை எழுதுவதன் மூலம் மற்றவர்கள் எந்த விஷயத்தை தவிர்க்க வேண்டும் என்று தெளிவாகத் தெரிந்து கொள்வதும் முக்கியம்.
உங்களுக்குத் தெரிந்திருந்தால், உங்களது பரிசோதனை முடிவுகள் என நீங்கள் நினைப்படஹியும், கூடவே சந்தேகப்படக்கூடிய எல்லா விஷயங்களைப் பற்றியும் கட்டாயம் எழுதவேண்டும். நீங்கள் ஒரு தேற்றம் எழுதினால், அந்த தேற்றத்தோடு ஒத்துவராத எல்லா விஷயங்களைப் பற்றியும் கட்டாயம் எழுதவேண்டும். அதனோடு ஒத்துப் போகும் விஷயங்களைப் பற்றி மாத்திரம் எழுதக்கூடாது. அதை விட இன்னும் ஒரு நுண்ணிய விஷயம் இருக்கிறது. பல கருத்துக்களைக் கோர்த்து ஒரு பெரிய தேற்றம் எழுதினால், அதன் விளக்கம் எல்லா விஷயங்களைப் பற்றியும் இருக்க வேண்டும். உங்களுக்கு இந்த தேற்றம் என்ற கருத்து வரக் காரணமான விஷயங்களைப் பற்றி மாத்திரம் எழுதக்கூடாது. அதே போல, இந்தத் தேற்றத்தின் விளைவாக இன்னொரு விஷயமும் வெளிவரவேண்டும். அந்த விஷயம் பரிசோதனை செய்து பார்க்கக் கூடியதாக இருக்கவேண்டும்.
சுருங்கச்சொன்னால், உங்களது பங்களிப்பை மற்றவர்கள் எல்லோரும் எடை போடத் தேவையான எல்லா விஷயங்களையும் தரவேண்டும். அவர்களை ஒரு புறம் சார்புகொள்ளத் தேவையான விஷயங்களை மட்டும் எழுதக்கூடாது.
ஒரு கருத்தை விளக்க எளிய வழி, அதனை இன்னொரு கருத்தோடு முரண்படுத்துவது. விளம்பரங்களைப் பாருங்கள். சென்ற இரவு உணவில் ஊறாது என்று காய்கறி எண்ணெய் விளம்பரம் வருகிறது. அது உண்மைதான். அது நேர்மையற்ற விஷயம் அல்ல. ஆனால் நான் பேசும் விஷயம் வெறும் நேர்மை மட்டும் அல்ல, அது அறிவியல் நேர்மை சம்பந்தப்பட்டது. அது இன்னொரு தளத்தில் இருக்கிறது. அந்த விளம்பரத்தோடு இன்னொரு வரியைச் சேர்த்திருக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட தட்பவெப்பத்தில் உணவைச் செய்தால், எந்த எண்ணெயும் உணவில் ஊறாது என்பது சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இன்னொரு தட்பவெப்பத்தில் அந்த உணவைத் தயாரித்திருந்தால், எல்லா எண்ணெயும் உணவில் ஊறத்தான் செய்யும். ஆகவே சொன்னது சரிதான். ஆனால் அறிவியல் நேர்மை அல்ல அது. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்தான் நாம் எதிர்கொள்ளவேண்டியது.
நம் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டது என்னவென்றால், உண்மை எப்படியும் வெளிவந்தே ஆகும் என்பதுதான். பல பரிசோதனையாளர்கள் உங்களது பரிசோதனையைத் திரும்பிச்செய்யும்போது நீங்கள் சரியா தவறா என்பதைச் சொல்லிவிடுவார்கள். இயற்கை உங்களது தேற்றத்தோடு ஒத்துப்போகும் அல்லது மறுதலிக்கும். தற்காலிகமாக உங்களுக்குப் பெயரும் புகழும் வந்தாலும், உங்களது வேலையில் கவனமில்லாமல் இருந்தால், நீண்டகாலத்துக்கு ஒரு அறிவியலறிஞர் என பெயர் உங்களுக்கு இருக்காது. இது போன்றதொரு நேர்மைதான், இது போன்றதொரு தன்னைத்தானே முட்டாளாக்கிக்கொள்ளாத அக்கறைதான், இந்த வானத்திலிருந்து மூட்டை விழும் அறிவியல் செய்பவர்களிடம் இருக்கிறது.
இதில் மிகவும் கடினமான விஷயம், எந்த விஷயத்தை ஆராய்கிறோமோ அந்த விஷயமும், அந்த விஷயத்தில் அறிவியல் முறையைப் பயன்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களும் தான். இருப்பினும், அது மட்டும் கடினமான விஷயம் என்று சொல்லிவிட முடியாது. விமானங்கள் தரை இறங்காததன் காரணம் அதுதான். அந்த விமானங்கள் தரை இறங்காது என்பதே ஒரு பெரிய சிக்கல்.
நம்மை நாமே முட்டாளடித்துக்கொள்ளும் வழிகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது எப்படி என்பதை நாம் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக, மில்லிகன் என்பவர் ஒரு எலக்ட்ரானின் சார்ஜ் எவ்வளவு என்பதை உதிரும் எண்ணெய்த் துளிகளை பரிசோதித்து கண்டறிந்தார். அவருக்குக் கிடைத்த விடை சரியானதல்ல என்பது நாம் அறிந்ததுதான். அதற்குக் காரணம், காற்றின் விஸ்கோஸிட்டி(என்ணெய்ப்பசைத்தன்மை) என்று அவர் எண்ணியிருந்த எண் தவறானது. மில்லிகனுக்குப் பிறகு எலக்ட்ரான் சார்ஜை அறியும் பல பரிசோதனைகள் நடந்திருக்கின்றன. அந்த விடைகளைப் பார்ப்பது சுவாரஸ்யமானது. ஒவ்வொரு எண்ணும் முந்தைய எண்ணுக்கு கொஞ்சம் அதிகமாக அதிகமாக, இறுதியில் இப்போதைய விடையை எல்லோரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் ஏன் அந்த இறுதி எண்ணை அப்போதே கண்டுபிடிக்கவில்லை ? இதைப் பற்றி அறிவியலாளர்கள் வெட்கப்படுவதில்லை. அதற்குக் காரணம், மற்றவர்கள் மில்லிகனின் பரிசோதனையை திருப்பிச் செய்தபோது, அதிகமான எண் கிடைத்தது. ஆனால் அவர்கள் நம் பரிசோதனையில்தான் ஏதோ தவறு இருக்கிறது என்று கருதினார்கள். என்ன காரணத்தால் தன் விடை தவறாக இருக்கிறது என்று தேடினார்கள். ஆனால் மில்லிகனின் எண்ணுக்கு அருகாமையில் கிடைத்த எண்ணுக்கு அவ்வளவாக தவறு என்று நினைத்து காரணம் தேடவில்லை. அந்தத் தவறுகளிலிருந்து நாம் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறோம். அப்படியே (முன் நடந்த சோதனைகளை) நம்புகிற வியாதி இப்பொது நம்மிடம் இல்லை.
ஆனால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாமலிருக்கும் கலையைக் கைக்கொள்ளும் திறனுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது - அதாவது அப்பழுக்கற்ற அறிவியல் நேர்மை. ஆனால், இந்த விஷயத்தை நாம் எந்தப் பாடத்திலும் முக்கியமாகச் சேர்த்துபேசுவதில்லை என்பதை வருத்தத்துடன் தான் கூறவேண்டியிருக்கிறது. நாங்கள் ஏதோ, ஆஸ்மாஸிஸ் (சவ்வூடு பரவல்) போல உங்களுக்கு இந்த விஷயம் வந்து சேர்ந்து விடும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
முதல் அடிப்படைக் கொள்கை உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளக்கூடாது என்பது. ஏனெனில், உங்களால் ஏமாற்றுவதற்கு மிக எளிய ஆள் நீங்களேதான். ஆகவே நீங்கள் அதில் மிகவும் அக்கறையாக இருக்க வேண்டும். உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளவில்லை என்றால், மற்ற விஞ்ஞானிகளை ஏமாற்றுவது இன்னும் கடினமானது. ஆகவே, பேசாமல் நேர்மையாகவே இருந்து தொலைத்துவிடலாம்.
அறிவியலுக்கு மிகவும் தேவையில்லாத ஒரு விஷயத்தைச் சேர்க்க விரும்புகிறேன். அதாவது ஒரு விஞ்ஞானி இல்லாத சாதாரண மனிதரை, நீங்கள் விஞ்ஞானி என்ற ஸ்தானத்திலிருந்து ஏமாற்றக்கூடாது என்று நம்புகிறேன். உங்கள் மனைவியை ஏமாற்றுவதைப்பற்றியோ, அல்லது காதலியை ஏமாற்றுவதைப்பற்றியோ, ஒரு சாதாரண மனிதனாக இருக்கும் சமயத்தில் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. அது உங்களுக்கும் உங்கள் மதகுருவிற்கும் - அல்லது மனசாட்சிக்கும் - இடையேயான விஷயம். நீங்கள் அறிவியலாளராக இருக்கும்போது உங்களது நேர்மை பற்றிய விஷயம் வேறு விதமானது. நீங்கள் தவறு செய்திருக்கவும் கூடும் என்ற கூடுதல் எச்சரிக்கை இருக்க வேண்டும். இது மற்ற விஞ்ஞானிகளுக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமை மட்டுமல்ல, சாதாரண மனிதர்களுக்குச் செய்யவேண்டிய கடமையும் கூட.
உதாரணமாக, ரேடியோவில் பேசப்போகும் என்னுடைய நண்பரிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது ஆச்சரியமடைந்தேன். அவர் வேலை செய்வதோ வானவியலிலும், பிரபஞ்ச அறிவியலிலும். இந்த அறிவியலுக்கு என்ன பிரயோசனம் இருக்கும் என பேசப்போகிறீர்கள் எனக் கேட்டேன். 'ஆமாம் இதற்கு ஒன்றும் நடைமுறை உபயோகம் கிடையாது ' என்றார். 'ஆனால் உண்மையைச் சொன்னால், இது போன்ற விஞ்ஞான ஆராய்ச்சி செய்ய பணம்கிடைக்காது ' என்று சொன்னார். இது ஒரு நேர்மையற்ற விஷயம் என்று நினைக்கிறேன். நீங்கள் விஞ்ஞானியாக இருந்தால், அந்த விஷயம் தெரியாத ஒருவருக்கு நீங்கள் உண்மையைச் சொல்லவேண்டும். அதனை அவர்கள் ஆதரிக்கவில்லை என்பது அவர்களது முடிவு.
அடிப்படைக் கொள்கையின் இன்னொரு உதாரணம், நீங்கள் ஒரு தேற்றத்தை பரிசோதனை செய்திருந்தீர்கள் என்றால், அதன் முடிவு என்னவாக இருந்தாலும் அதனைப் பிரசுரம் செய்யவேண்டும். விவாதத்தின் ஒரு பக்கத்துக்கு ஆதரவான விளைவுகளை மட்டும் பிரசுரிப்பது என்பது சரியல்ல. எல்லா பரிசோதனை முடிவுகளையும் வெளியிடவேண்டும்.
அரசாங்கத்துக்கு அறிவுரை தருவது என்பதிலும் இதே போன்ற முக்கியத்துவம் இருக்கவேண்டும் எனக்கூறுகிறேன். ஒரு எம்.பி (செனட்டர்) தன்னுடைய தொகுதியில் ஆழ்குழாய் கிணறு போடலாமா என்று கேட்டால், நீங்கள் இன்னொரு தொகுதியில் செய்தால் நல்லது என்று நினைத்தீர்கள் என்றால், அதனை வெளியிடவேண்டும். அப்படிப்பட்ட பரிசோதனை செய்து முடிவில் அதனை வெளியிடவில்லை என்றால் உங்களை அவர்கள் தம் நலனுக்காகப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்றுதான் அர்த்தம். அரசாங்கமோ, எம்.பியோ தேவைப்பட்டால் உங்களது பரிசோதனை முடிவை உபயோகப்படுத்திக்கொள்வார்கள். அவர்களுக்குச் சாதகமாக இல்லை என்றால் அதனை பிரசுரிக்க மாட்டார்கள். அவர்களுக்குச் சாதகமான யோசனை, அறிவியல் அறிவுரை அல்ல.
மனவியல் துறை (psychology department)மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதில் ஒரு மாணவி, ஒரு பரிசோதனை செய்யவிரும்பினாள். ஒரு குறிப்பிட்ட 'எக்ஸ் ' சூழ்நிலையில் எலிகள் ஒரு வேலை செய்கின்றன என்று ஏற்கெனவே மற்றவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். அவள் அந்த சூழ்நிலையை 'ஒய் ' ஆக மாற்றி அதே வேலையை எலிகள் செய்கின்றனவா என்று அறிய விரும்பினாள்.
நான் அவளிடம், முதலில் அதே 'எக்ஸ் ' சூழ்நிலையை மீண்டும் உருவாக்கி அந்த எலிகள் அதைத்தான் செய்கின்றனவா என்று பார்ப்பது முக்கியம் என்று சொன்னேன். அந்த வேலையை அவை செய்கின்றன என்று தீர்மானம் ஆனவுடன், அந்தச் சூழ்நிலையை 'ஒய் ' ஆக மாற்றி அந்த வேலையை அந்த எலிகள் செய்கின்றனவா என ஆராயலாம் என்று சொன்னேன். அப்போதுதான் அந்த சூழ்நிலை அவள் கட்டுக்குள் இருக்கும் என்று விளக்கினேன்.
அவள் மிகவும் ஆர்வமாக இந்த புதிய கருத்தை எடுத்துக்கொண்டு அவளது பேராசிரியரிடம் சென்றாள். ஏற்கெனவே அந்த எக்ஸ் பரிசோதனை செய்யப்பட்டுவிட்டதால், மீண்டும் அதனைச் செய்வது வெட்டிவேலை என்று பேராசிரியர் சொல்லிவிட்டார். 1947ஆம் வருடம் என்று நினைக்கிறேன். மனவியல் பரிசோதனைகளை மீண்டும் செய்யக்கூடாது என்று அப்போது பொதுவான கொள்கை இருந்ததது. ஆனால், சூழ்நிலைகளை மாற்றினால் தான் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்றும் கொள்கை இருந்தது.
அதே போன்றதொரு விஷயம் இப்போதும் நடப்பதற்தான அபாயம் இருக்கிறது- பரிசோதனை நேர்மைகுப் புகழ் பெற்ற பெளதீகவியலில் கூட. தேசிய ஆக்ஸலரேடர் பரிசோதனைச்சாலையில் பளுவான ஹைட்ரஜனைக் கொண்டு பரிசோதனை செய்யப்போவதாக ஒருவர் சொன்னார். அவரது பரிசோதனை முடிவுகளை இன்னொருவர் பளுகுறைந்த ஹைட்ரஜனைக்கொண்டு இன்னொரு உபகரணத்தில் செய்த முடிவுகளோடு ஒப்பிடப்போவதாகச் சொன்னார். ஏன் என்று கேட்டபோது, பளு குறைந்த ஹைட்ரஜனைக்கொண்டு இந்த விலையுயர்ந்த உபகரணத்தில் பரிசோதனை செய்ய நேரம் கிடைக்க வில்லை என்று சொன்னார். இந்த பரிசோதனைச்சாலையை தொடர்ந்து நடத்த வேண்டும், அதற்கு அதிகமான பிரயோசனமான விளைவுகளை உற்பத்தி செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில், அந்த பரிசோதனைகளின் அடிப்படை நேர்மையையே அழிக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள் இந்த பரிசோதனைச்சாலையை நடத்துபவர்கள்.
மனவியல் பரிசோதனைகள் எல்லாமே இப்படிப்பட்டவை அல்ல. பல சிக்கலான சுற்றுவழிகளின் (Mazes) ஊடே செல்லும்படிக்கு எலிகளைத் தூண்டும் பல பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன. எதிலும் உருப்படியான விளைவு கிடைத்ததில்லை. ஆனால், 1937இல் யுங் (Young) என்ற ஒருவர் சுவாரஸ்யமான பரிசோதனை செய்தார். ஒரு பக்கம் பல கதவுகளிலிருந்து எலிகள் வருகின்றன. மறுபுறம் பல கதவுகள். அதில் ஒரு சில கதவுகளுக்குப் பின்னர் உணவு. இந்த எலிகளை எப்போதும் மூன்றாவது கதவுக்கே செல்லும்படி தூண்டமுடியுமா என்று பரிசோதனை செய்தார். ஆனால் எலிகள் எப்போதும் முன்னர் எந்த கதவுக்குப் பின்னால் உணவு இருந்ததோ அந்த கதவுக்கே சென்றன.
கேள்வி என்னவென்றால், எப்படி எலிகளுக்குத் தெரியும் என்பதுதான். ஒரே மாதிரியான கதவுகள் இருந்தால் ஒருவேளை அவைகளை முட்டாளடிக்கலாமா ? ஆகவே எல்லா கதவுகளையும் ஒரே மாதிரியாக நுணுக்கமாக வரைந்து எல்லா கதவுகளும் ஒரே மாதிரியாக இருக்கும் படிச் செய்து பரிசோதனை செய்தார். இருப்பினும் எலிகள் எந்த கதவுக்குப்பின்னால் முன்னர் உணவு இருந்தது என்பதை சரியாகக் கண்டுபிடித்துவிட்டன. ஒருவேளை உணவை எலிகள் மோந்து வரலாம் என்று நினைத்து வேதிப்பொருட்களைக் கொண்டு வாசனையை மாற்றினார். இருப்பினும் எலிகள் சரியாகச் சொல்லமுடிந்தன. ஒருவேளை மேலே பரிசோதனைச் சாலையைப் பார்த்து அதனை மையமாகக் கொண்டு கதவைக் கண்டுபிடிக்கின்றன என்று விளக்கை அணைத்து செய்துபார்த்தார். இருப்பினும் எலிகள் கண்டுபிடித்துவிட்டன.
இறுதியில் அந்த கதவின் மீது ஓடும்போது வரும் ஒலியைக்கொண்டு அவைகள் அடையாளம் காண்கின்றன என்று கண்டறிந்தார். அந்த கதவுகளை மணலில் வைத்து சப்தத்தை அழிக்கும்போதுதான் அந்த எலிகளை முட்டாளடித்து மூன்றாவது கதவுக்குப் போக வைக்க முடிகிறது. இதில் ஏதாவது ஒரு சுற்றுச்சூழலை மாற்றினாலும், அந்த எலிகளால் அடையாளம் காண முடியும்.
அறிவியல் நிலைப்பாட்டிலிருந்து, இது ஒரு ஏ-நம்பர்-ஒன் - பிரமாதமான - பரிசோதனை. இது எலிகளை கொண்டு செய்யும் பரிசோதனைகளை அறிவுப்பூர்வமாக ஆக்குகிறது. இது எலிகள் எந்த எந்த உபாயங்களைப் பயன்படுத்துகின்றன என்று தெளிவாக்குகிறது.
இந்த ஆராய்ச்சியில் அப்புறம் நடந்த வரலாற்றைப் பார்த்தேன். அதன் பின் மற்றவர்கள் செய்த எந்த பரிசோதனையும் யுங் அவர்களது பரிசோதனையை மேற்கோள் காட்டவில்லை. அவர் சொன்னது போல மணலின் மீது எலிகள் ஓடும் மேஜையை வைக்கவில்லை. பழைய படியே அவர்கள் எலிகளை ஓடவிட்டு பரிசோதனை பண்ணிக்கொண்டிருந்தார்கள். சொல்லப்போனால் அவர் எலிகளைப் பற்றிய முக்கியமான கண்டுபிடிப்புகளை எல்லாம் செய்திருக்கிறார். இப்படிப்பட்ட பரிசோதனைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது வானத்திலிருந்து மூட்டை விழும் அறிவியலுக்கு நல்ல உதாரணம்.
ரைன் இன்னும் பலர் செய்த தொலை உணர்வு பரிசோதனைகள் (Extra Sensory Perception) நல்ல உதாரணம். பலர் இதனை பலவாறு விமர்சித்து இருக்கிறார்கள். தங்கள் பரிசோதனைகளையே பலரும் விமர்சித்து இருக்கிறார்கள். பாரா- சைக்காலஜி என்னும் இந்த துறையில் திரும்பத்திரும்ப செய்யக்கூடிய, ஒரே விடையைத் தரும் பரிசோதனையைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். ஒருமுறை செய்தால் ஒரு விடை மறுமுறை செய்தால் புள்ளிவிவரம் மாறிவிடுகிறது. இப்போது திரும்பத்திரும்ப செய்தால் ஒரே விடையைத் தரும் பரிசோதனை என்பதே தேவையற்ற கோரிக்கை என்று ஒருவர் சொல்கிறார். இது அறிவியலா ?
ஆகவே, நான் சொன்னபடியுள்ள நேர்மையை உபயோகப்படுத்தும்படியான ஒரு இடத்தில் நீங்கள் இருக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களது இடத்தைக் காப்பாற்றிக்கொள்ள, அல்லது உங்களது வருமானத்தைக் காப்பாற்றிக்கொள்ள உங்களது அறிவியல் நேர்மை இழக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லாத ஒரு சுதந்திரமான இடத்தை அடைய என் வாழ்த்துக்கள். உங்களுக்கு அந்த சுதந்திரம் கிடைக்கட்டும்.
****

Friday, July 03, 2009

நவீன 3-டி எக்ஸ்-ரே

ஜொ்மனியைச் சேர்ந்த ஹெம்ஹொட்ஸ் மருத்துவ ஆராய்ச்சி (Helmholtz Zentrum Munchen) நிறுவனத்தைச் சோ்ந்த ஆராய்ச்சியாளர்கள் உயிரினங்களின் உள் உறுப்புகளை படம் எடுக்கும் நவீன எக்ஸ்-ரே முறையை கண்டுபிடித்துள்ளனர். டாக்டர் வாசிலிஸ் தலைமையில் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் முடிவில் இந்த முறை கண்டறியப்பட்டுள்ளது.

துணி முதலியவற்றிற்கு நிறமூட்டப் பயன்படுத்துவதைப் போன்ற வேதியியல் கலவையை (டை) உடலில் ஊசி போட்டு செலுத்திய பிறகு அப்பகுதியில் லேசர் கதிர்களை செலுத்தி உள் உறுப்புகளின் தெளிவான படங்களை எடுக்கும் வகையில் இந்த நவீன முறை அமைந்துள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படு்த்தும் நுண்ணோக்கிகள் திசுக்கள் பற்றிய ஆராய்ச்சித் துறையிலும் பெரும்புரட்சியை ஏற்படுத்தவிருக்கின்றன.

LinkWithin

Related Posts with Thumbnails