Showing posts with label கோவில். Show all posts
Showing posts with label கோவில். Show all posts

Tuesday, June 28, 2011

பாவம் , பாவம் செய்த தெய்வங்கள்



தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான ஊர்களில் பழைய  கோவில்களும் உண்டு.  தெருவுக்கு ஒரு கோவில்என புதிததாய் முளைத்த பலகோவில்கள் உண்டு.

கிராம அய்யர்கள்நகரங்களுக்கு  தேவையான வருமானம் கருதி இடம்பெயர்ந்து விடுவதால் கிராமங்களில் பெரிய கோவில்கள் தவிர அய்யர்கள் தட்டுபாட்டினால்சிறு கோவில் தெய்வங்கள்   வாரம்  ஒரு முறை குளிக்கும பூ வைத்து பொட்டு வைத்து கொள்ளும்.

அய்யர்கள் தட்டுபாட்டினால் ஒரு கிராம அய்யர் குறைந்தது சிறு சிறு பத்துகோவில்கள்  தன்கட்டபாட்டில் வைத்திருப்பார்கள். அங்கு அவர் வருகை தினசரி என்றெல்லாம் இருக்காது.

அப்படி அவர்  தினசரி வருகை புரிந்து கோவில் தெய்வத்தை குளிபாட்ட வேண்டுமென்றால்  மாதம் இவ்வளவு என்று சம்பளம் பேசிக்கொடுத்துகோவில்  விசேசநாட்களில் அவர் ஏற்பாடு செய்யும்சிறப்பு பூசைகள் யாகங்களுக்கு அந்தபகுதி மக்கள் ஒத்துழைப்பு கொடுத்துநடத்தினால் அந்தகோவில் கோவிலாக இருக்கும் இல்லாவிடில்  இருண்ட கோவில் தான் அது.

இன்றைக்கு தமிழகத்தின் நிறையகிராமங்களில்  உள்ள சிறு சிறு கோவில்கள் அழிந்தும் புதிததாய் முளைத்து கொண்டும் தான் இருக்கின்றன.

அய்யர் ஒருவர் பிடித்து வைத்துள்ள பத்துகோவில்களில் அதுவும் ஒன்று. சிறிய சிவன் கோவில் அது. அர்ச்சனை செய்ய நிறையமக்கள்  கோவிலுக்கு வெளியே நின்றிருந்தார்கள். மாலை ஆறு மணியாகியும் கோவில் திறக்கப்படவில்லை.

கோவில் சாவி வைத்துள்ள பெரியவர் விரைந்து வந்தார்  இன்றைக்கு அய்யர் வரமாட்டார் என்று சொல்ல
விளக்கு மட்டும் போடவந்தவர்கள் விளக்கு ஏற்றிச்செல்ல அர்ச்சனை அந்தபெரியவரே செய்தார்.
கருவறைக்கு வெளியிலே நின்றுகொண்டே பூவை  கருவறையின் உள்ளே இருக்கும் தெய்வத்தின் மீது தூக்கி எறிந்தார்.
ஏற்கனவே காய்ந்த பூக்கள் சிதறிகிடந்தது. வெளியில் இருந்தவாறே தேங்காய் உடைத்து சூடம் காட்டினார்.
மந்திரங்கள் கிடையாதுஅர்ச்சனை முடிந்தது.

அய்யர் கட்டுபாட்டில் உள்ளகோவில்களில் வருமானம் அதிகம் உள்ள தெய்வங்களுக்கு சிறப்புகவனம் செலுத்தப்படும். வருமானம் வராத கோவில்களின் தெய்வங்களுக்கு அய்யர்களின் பராமுகம் நிரந்தரம்

பாவம் , பாவம் செய்த தெய்வங்கள்.

Monday, January 17, 2011

உலகபாரம்பரிய சின்னம் தாராசுரம் கோவில் பயணம்

சிற்பம்
12-ம் நூற்றாண்டில் இரண்டாம் ராசராசரால்  கட்டப்பட்ட   தமிழ்நாடு கும்பகோண  த்திற்கு அருகில் தாராசுரம் ஐராவதேஸ்வர ர் கோ யிலை    நோ க்கி  எங்களது  பொ ங்கல் பயண  ம்  அமைந்தது.


2004 ம் ஆண்டு உல க    பாரம்பரிய  சின்னமாக அறி விக்கப்பட   மத்திய அரசு இக்கோயிலை  கையில் எடுத்து பராம ரித்து வருகிறது.
சிதிலமடைந்த முகப்பு


நுழைவாயில்

வாயிலில் நந்தி சாமி

நுழைவாயில் கோபுரம்

உள்கோவில்

உள்கோபுரம்

மதில்மேல் நந்தி சாமி

சிற்பம்



நாங்கள் சென்றபொழுது கூட்டம்  அ வ்வள வாக  இ ல்லை  . வெளிநாட்டினார் வ ருகை  கணிசமாக  இருந்தது.

தனிமையில்....


சிற்பம்


சிற்பம்


கருவறையிலிருந்து நீர் வெளியேற...


சிங்க சிற்பம்


சாமி....!!!!???


ரசிப்பு


வருகை


விளையாட்டு


நேரம் நேரம் ஆ  க ஆக  கோ விலை   சுற்றியுள்ள புல்வெளிகளில்      திறந்தவெளி  வட்ட  கூட்டம் நடத்த  மக்கள்  கும்பல் கும்பலாக வர ஆ ரம்பித்தார்கள்.
சிறுவ ர்கள் சிறுமியர்களுக்கு சிறந்த விளை யாட்டு மைதானமாக  பயன்பட்டது.







Wednesday, April 14, 2010

பிடி அரிசி அம்மன்


ஆடி மாதம் வரும் ஆடி பெருக்கின்போது சாமி கும்பிட அம்மன் தேவை. வாய்க்கால் ஓரம் அம்மன் கோவில் சிறிதாக கட்டப்பட்டது.

வழக்கமாக விளக்கேற்றுவார்கள் அம்மனுக்கு வேண்டிகொண்டவர்கள் பூசை செய்வார்கள். எல்லோருடைய நிதி உதவியும் பெற்று அம்மன் கோவில் பெரிதாக்கப்பட்டது.

பெரிதாக்கபட்டதால்  அதனுடைய நிர்வாகசெலவும் அதிகரிக்க வருமானம் பெருக்கவேண்டுமே என்ன செய்ய.. அதனை நிர்வாகம் செய்தவர் தன்னுடைய மூளையை கசக்கி  அம்மனுக்கு பெயர்மாற்றம் செய்தார்.

மகமாயி “பிடி அரிசி அம்மன் ”  ஆனது.  பிடி அரிசி அம்மனுக்கு என்று தனியாக ஒரு கதை உருவாக்கப்பட்டது.

ஆயிரகணக்கானசுற்றுபுற கிராமமக்கள்  கூடியிருந்த பங்குனி திருவிழாவில் அந்தகோவிலை நிர்வாகம் செய்தவரால் கதை  அளந்துவிடப்பட்டது.

எங்கிருந்தோ ஒரு பெண் இந்த மகமாயி கோவிலை விசாரித்து  வந்து வேண்டிகொண்டது  நிறைவேறியதாம். பிடி அரிசியை வைத்து துணியில் முடிந்து வேண்டியதால் வேண்டியது நடந்ததாம்.

அதனால் வேண்டும் வரம் பலிக்க பிடி அரிசி அம்மன் ஆலயத்திற்கு வந்து  பிடி அரிசி யை  அதற்குரிய தொகை கொடுத்து பெற்று செல்லவும் என்று ஒலிப்பெருக்கியில்  அறிவித்து கொண்டே இருந்தார்.

மக்களுக்கு சொல்லவா வேண்டும் அந்த ஏரியாவிற்கு இது புது டிரெண்ட். விற்பனை ஜோர்.

வரும் காலங்களில் இந்தகதைவரலாறு ஆகலாம்  இந்து சமயத்தின் மிகப்பெரிய சாபகேடு உண்மையல்லாதவைகள் உண்மையென கிளம்புவது தான்.

முழுக்க முழுக்க பக்தி என்பது ஒருவிதமான மனத்தின் போக்கு  ,போக்கின் முடிவு தன்னையறிதல்  .

அறிந்து கொள்ளும்வரையில் தெருவிற்கு ஒரு கோவில்   அந்த கோவில் சொல்லும் ஓர் பொய் கதை  என்பது தொடர் நிகழ்வு.

LinkWithin

Related Posts with Thumbnails