Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts

Saturday, May 21, 2016

அரியணை ஏறிய அஇஅதிமுக ..!!?? எதிர்கட்சியாம் திமுக

சபாஷ் ... பலமான போட்டியில் வெற்றி வாகை சூடிய அஇஅதிமுக.. நிறையவே பாடுபட்டு வெற்றியை இழந்த திமுக.

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்ற நியதியை உடைத்தற்காகத் தமிழக மக்களுக்கு வாழ்த்துகள் சொல்லலாம் .

திமுக-வை திரும்பவும் குழிக்குள் தள்ள க்காரணம் உண்டு  என்றால் அது கட்டபஞ்சாயத்தார்கள் நிறைந்த திமுக. தமிழகத்தின் சிறுஊர்களில் கூடப்   போன திமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட  ஏழைகள்...அய்யோ அவர்களா..??!!
என்று நினைக்க வைத்தது உண்மை.

திமுக திரும்பவும் தன்னைச் சீர்திருத்தி குறைகளைக் களைந்து புதுபித்து க்கொள்ள மறுபடியும் ஐந்து வருடங்கள் தமிழகமக்கள் வழங்கியுள்ளார்கள்.
வாரிசுகளின் வேட்பாளர் நியமனம்   பழைய வேட்பாளர்கள் முன்பு அதிகாரத்தில் இருந்தவர்களே கட்சி அதிகாரத்தில் தொடர்வது புதிய விளம்பர பாணியில் பழைய திமுக -வின் முகம் தென்பட்டது.

ஊடகங்கள் சுட்டிக்காட்டிய 2ஜி ஊழல் ஈழப்பிரச்சினை  திமுக-வின் நிரந்தர கறைகளாய் வரலாற்றில் பதிந்த ஒன்றை இன்றைய வளரும் தலைமுறை மறக்கவில்லை .

பலர் வாய் மூட  அறிக்கைகள் விட்டு  ச்சொல் ஒன்றாய் செயல் ஒன்றாய்  ஆனதால் திமுக தலைவர் இந்தத் தேர்தல் தோல்வியை அறுவடை செய்தார்.

தமிழக மக்கள் சிறந்த எதிர்க்கட்சியாக விளங்கும் வாய்ப்பினை திமுக வழங்க ச்சட்டசபையினுள் இருந்து மக்கள் பிரச்சனைகளை  எடுத்து ப்பேசி  ஆளும் அதிமுக-வை  தறிகெட்டு ஓடும் குதிரையாக  இல்லாமல் ஆக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு திமுக உண்டு .

பார்க்கலாம்...திமுக-வின் செயல்பாடுகளை வரும் காலங்களில்....

அதிமுக திரும்பவும் அரியணை  செயல்படா முதல்வர் செயல்படா அரசு என்பதை னை மாற்ற முயலவேண்டும்.

படிப்படியாக மதுவிலக்கு முதல்படியை இந்த அரியணை ஏறியவுடன் மக்களுக்குத் தெரிவிக்க முதல்வர் கடமைப்பட்டுள்ளார்.

முந்தைய அரசாக இல்லாமல்  செயல்படும் அரசாய் மாற்ற மக்கள் மிகசரியாக  சிறந்த எதிர்க்கட்சி யை வலுவான நிலையில் கொண்டுவந்து நிறுத்தி உள்ளார்கள்.

கடந்த ஐந்து வருட ஆட்சியில் மக்களுக்கு அரசியல்வாதிகளால் தொந்தரவு கிடையாது அதனால் கிடைத்த நற்பெயர் மட்டுமே அதிக வித்தியாசம் இல்லாத இந்த வெற்றியை  அதிமுக விற்கு மக்கள் கொடுத்துள்ளார்கள்.

இன்னமும் தன்னை சீர்துர்க்கி திருத்தி க்கொள்ளவேண்டிய நிலையில் அதிமுக உள்ளது  என்பதும் மறுப்பதற்கில்லை.

பார்க்கலாம்...வரும் காலங்கள் சொல்லும்....



Thursday, December 17, 2015

ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஆளும்கட்சிக்கு அற்புதமான வாய்ப்பு

சென்னை மழை பலவிதமான விமர்சனங்களை ஆளும்கட்சிக்கு  ச்சங்கடத்தை ஏற்படுத்தினாலும் அவற்றையெல்லாம் துடைத்தெறிய  ஒரு வாய்ப்பைச் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது.

கூவம், அடையாறு,பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் உத்தரவு.

செய்யவேண்டியது

பாராட்டுகள்

காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அரசு சென்னையிலும் எந்த ப்பாரபட்சமும் இல்லாமல் உடனடியாக செயலாற்ற தொடங்கினால்  எதிர்க்கட்சிகளுக்கு பலத்த பின்னடைவை கொடுக்கும் செயலாக அமைந்துவிடும்.

மக்களுக்கும் நம்பிக்கை வரவைக்கும் செயலாக அமைந்துவிடும்.

அஇஅதிமுக அரசின் மிகப்பெரிய பலவீனம் உள்ளாட்சி துறை.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆளும்அரசை விமர்சித்து தங்களை நிலைநிறுத்திக்கொள்ளும் வாய்ப்பாகச் சென்னை மழை வெள்ளத்தைப்பயன்படுத்தினாலும் தப்பிக்கும் வாய்ப்பாக ச்சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு வந்துள்ளது.

ஆளம்அரசு பயன்படுத்தி கொள்ளுமா...!!??

Monday, September 30, 2013

கொஞ்சம் அரசியல்.

நாகை நகரம் பா.ஜ.க  என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்ட
வேன்கள் பா.ஜ.க. கொடி தாங்கி  நாகையிலிருந்து திருச்சி நோக்கி  விரைந்து சென்றுக்கொண்டிருந்தன.

மதியம் 12 மணியளவில் எனது இருசக்கர வாகனபயணம்  மிக கவனமுடன்  நிகழ்ந்தது.

இடையே இடையே மரநிழல்களில் ஒவ்வொரு வேனை நிப்பாட்டி தயாரித்த கொண்டு வந்திருந்த பட்டைசாதம் பாக்கு மட்டை தடடுகளில் விநோயிக்கப்பட்டது.

வருங்கால பிரதமர் … மோடி  குரொலிகளுக்கு குறைவில்லை.

அ.தி.மு.க.    , தி.மு.க. வண்டிகளின் அணிவகுப்பையே பார்த்த கொண்டிருந்த கண்களுக்கு  தமிழ்நாட்டில் பா.ஜ.க. எழுச்சி பொதுமக்கள் மக்கள் மத்தியில்   மோடி திருச்சிக்கு வருகை புரிந்த நாள் முழுவதும் விவாதிக்கப்பட்டு கொண்டிருந்தது.

மறுநாள் மறந்து போனார்கள் திருவாளர்கள் பொதுமக்கள்.

முந்தைய நாட்களில் பா.ஜ.க.   எங்கள் ஊரில் இருப்பதை அந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நாளில் மட்டுமே தெரிந்து கொள்ளலாம் .


இத்தகைய சூழலில்  இக்கட்சியின் திடீர் எழுச்சி    மோடியை மையப்படுத்தி தான் என்று சொல்வதில் ஒன்றும் மோசமில்லை   தான்.

Tuesday, September 17, 2013

கொஞ்சம் அரசியல்.

காங்கிரஸ் கட்சி இருக்குவரைக்கும் நாம் உருப்புடமுடியாது.  தகவல் தொடர்பு விரிவாக இல்லாத காலங்களில் எந்த ஒரு திட்டத்துக்கும் மாநில  அரசை குறைசொல்வது வாடிக்கை.

மத்திய அரசின் மாநில அரசுக்குரிய பங்களிப்புகள் பற்றி ஊடகங்கள் வாயிலாக  மக்கள் தெரிந்து கொண்ட நிலைமையில் காங்கிரஸ் கட்சி பற்றி மக்களின் எண்ணம் தி்.மு.க.  வை தமிழகத்தில் பெருத்த அடி கொடுத்து  ஆட்சியை விட்டு இறக்கியது மாதிரி காங்கிரஸை    மக்கள்  மத்தியில் இருந்துஇறக்க வேண்டும்.


அதே நேரத்தில் பா.ஜ.கட்சியினரின்     ஒற்றுமையின்மை ஒரு பக்கம் பயத்தை விளைவித்து கொண்டிருக்க எப்படியோ நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்தி   பாரதீய ஜனதா கட்சி  தன்னை நிலைப்படுத்தி கொள்ள நினைக்கிறது.

மாநில அரசியலில் நிர்வாகத்தில் தன்னை முனனிலைப்படுத்தி கொண்ட மோடி  தேசிய அரசியலில்  ஜொலிப்பாரா என்ற வினாவினையும் ஆச்சரியங்களையும் ஊடகங்கள் பிரபலப்படுத்தாமல் இல்லை.

அதற்கு ஒரே தீர்வு மக்களாகிய நாம் ஒரு வாய்ப்பு வழங்குவதை பொறுத்தே அமையும்.

அதற்குள்ளாகவே தற்போதையதமிழக முதல்வரை  பிரதமர் நாற்காலிக்கு  அழைத்து செல்ல வாய்வழியே சில தலைவர்கள் உருவாகி கொண்டிருக்கிறார்கள்.


தமிழக அரசின் பல திட்டங்கள் இன்னமும் முழுமையாக  தமிழகத்தை            சென்றடையாமல் இருக்க அ.தி.மு. க. ஆட்சியின் முழுபலனை இன்னும்  தமிழகமக்கள் அனுபவிக்கவில்லை. மாநில அரசியலே இன்னும் சரிப்படுத்த படாத நிலையில் அவரை பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று சொல்வது எந்த வகையில் நியாயமோ தெரியவில்லை.

தமிழக மக்களின் மனபோக்கு  அ.தி.மு.க. ஆட்சியில் ஓ.கே. சொல்லுமளவிற்கு சென்று கொண்டிருக்கதமிழக மக்களை  தன்பக்கம் திருப்ப தி்.மு.க. படாதபாடு  பட்டு கொண்டிருக்கிறது  என்பது உண்மை.


தி.மு.க. தலைவரின் வார்த்தை ஜாலங்கள் தமிழகத்தில் இனி எடுப்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்விகள்.  ஏனென்றால் அவரது மயக்கும் வார்த்தை விளையாட்டுகளில்  மயங்க அவர் வயதுகேற்ற ஆட்கள் தமிழகத்தில் மிகவும் கம்மி.


வரவிருக்கும் லோக்சபா தேர்தல்களின் முடிவுகளில் தலைவர்களின் முகத்திரை கிழியும் வரை காத்திருப்பது மக்களாகிய நம் கடமை.

Saturday, April 27, 2013

தும்ப உட்டுபுட்டு வால புடிக்கிற கத


தனியார் வணிக வளாகக் கட்டட தீ விபத்துக்குப் பிறகு, கோவையில் அதிகாரிகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் காலம் கடந்தவையாகவே காணப்படுகின்றன.
கோவையில் வியாழக்கிழமை தனியார் வணிக வளாகக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து 4 பெண்களின் உயிரை பலிகொண்டது. இச்சம்பவம் கோவை மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதுமட்டுமல்ல, அரசு அதிகாரிகளின் மனதையும் இந்த விபத்து உலுக்கி விட்டது. கோவை மாநகரில் தற்போது எடுக்கப்பட்டு வரும் உடனடி நடவடிக்கைகள் அதன் எதிரொலிகளே.
கோவையில் இதுதான் முதல் தீ விபத்து என்று யாரும் கூறிவிட முடியாது. இதற்கு முன்னரும் பல பெரிய தீவிபத்துகள் நிகழ்ந்துள்ளன.
கடந்த 2010 ஜூன் 27-ஆம் தேதி, கோவை, நஞ்சப்பா சாலையில் ஒரு தனியார் ஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து, 2012 ஜனவரியில் குறிச்சி மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து, அதே ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி தண்ணீர்ப்பந்தல் சாலையில் பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்து,  அதே ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி தெற்கு உக்கடத்தில் மௌலானா முகமது அலி மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்து எனப் பலவற்றை கோவை கண்டிருக்கிறது.
இந்தச் சம்பவங்கள் அனைத்திலும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலும், பெருமளவில் பொருட்சேதம் ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற பேரிடர்க் காலங்களில், தற்போதைய தீ விபத்துக்கு என்னென்ன காரணங்கள் சொல்லப்படுகின்றனவோ இதே காரணங்கள் அப்போதும் கூறப்பட்டன.
அப்போதும் இதேபோல, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, மாநகராட்சியின் நகரமைப்புப் பிரிவு, உள்ளூர்த் திட்டக் குழும அதிகாரிகள், மாநகரில் முறையான அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைக் கணக்கெடுத்தனர். தீயைணைப்புத் துறையினர் தங்களிடம் சான்று பெறாத கட்டடங்களைக் கணக்கெடுத்தனர். ஆனால் அதற்கடுத்த கட்டப் பணிகள் தான் நடைபெறவில்லை.
தூக்கியடிக்கப்படும் அதிகாரிகள்: இதுபோன்று அனுமதியின்றி கட்டடம் கட்டுவோர் மாநகரின் பெரிய புள்ளிகளாகவும் தொழிலதிபர்களாகவுமே உள்ளனர். தெரிந்தே தவறு செய்பவர்கள் இவர்கள்.
பேரிடர்க் கால நேரங்களில் சில அதிகாரிகள் துணிந்து நடவடிக்கைகள் எடுத்தாலும், பெரும்புள்ளிகள் தங்களது அதிகார பலத்தைப் பயன்படுத்தி, மேலிட நிர்பந்தம் மூலமாக அந்த அதிகாரிகளை வேறு மாவட்டங்களுக்கு இடம் மாற்றி விடுகின்றனர்.
அண்மையில், இவ்வாறு துணிந்து நடவடிக்கையில் ஈடுபட்ட உள்ளூர் திட்டக் குழும அதிகாரி ஒருவர் வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கே இந்நிலை என்றால், நாங்கள் என்ன செய்ய முடியும் என்கின்றனர் தீயணைப்புத் துறையினர்.
மதிக்கப்படாத அரசு உத்தரவுகள்: 50 அடி உயரத்துக்கு மேல் உள்ள அனைத்துக் கட்டடங்களையும் உயர்மாடிக் கட்டடங்கள் என்று கணக்கில் கொள்ள வேண்டும். தீயணைப்புத் துறை அனுமதி பெறாத கட்டடங்கள் இயங்கக் கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பேரிடர்க் காலங்களில் பயன்படுத்த தீ விபத்துத் தடுப்புக் கருவிகள், சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும். தீ விபத்தில் சிக்கியவர்கள் பாதுகாப்பாக ஒதுங்க இடம் ஒதுக்க வேண்டும். பெரிய வணிக வளாகக் கட்டடங்களில் தீயணைப்பு வாகனங்கள் சென்றுவரும் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் தேசிய கட்டட விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகளை கட்டட உரிமையாளர்கள் மதித்திருந்தாலும், அரசு அதிகாரிகள் சரியாகப் பின்பற்றியிருந்தாலும், விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்பில்லை.
தற்போது தீ விபத்து நிகழ்ந்த கட்டடம் விதிமுறை மீறிக் கட்டப்பட்டுள்ளது. இந்த உண்மை இப்போது தான் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது என்று கூறுவது, யாரும் நம்ப முடியாத ஒன்று.
எனவே விதிமீறல்கள் பிரச்னைக்குரியவை என்று தெரிந்திருந்தும் இத்தனை நாள்களாக நடவடிக்கை எடுக்காத நிலையில், 4 உயிர்கள் தீயின் கோரத்துக்கு இரையான பின்னரே அதிகாரிகள் விழித்துள்ளனர். இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்துமே, கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் வேலை தான்.

நன்றி : தினமணி

Tuesday, March 12, 2013

கருணாநிதி ரொம்ப ஏமாத்துகிறார்

முதல் நாளே தி.மு.க . அரசியல்வாதிகளால் டெசோ பந்த் கடைகள் அடைக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது.

பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பள்ளிகள் கல்லுாரிகள்   ஆட்டோ பேருந்துகள் இயங்கின.

சாதாரண ஒரு குடிமகன் சொன்னது.

ஆட்சியில் இருந்தப்ப  இலங்கை பிரச்சனையை சரிபார்க்க முடியல...இப்ப பந்த் பண்ணி என்ன புண்ணியம்.

நம்மல கருணாநிதி ரொம்ப ஏமாத்துகிறார் என்று  சொன்னார்.




சமூகவலைத்தளத்தில் மாணவர்களின் போராட்டம் பற்றி சொல்லப்பட்ட ஒரு கருத்து.
 
“தமிழ் நாட்டில் ஈழ பிரச்சனை மாணவர் அமைப்பு போன்று எந்த அமைப்பால் முன்னெடுக்கபட்டாலும்  அதனுடைய உடனடி பலனை அறுவடை செய்யபோவது அ தி மு க தான்  ஏனென்றால் இந்த போராட்டம் தீவிரமாகும்போது போர் உச்சகட்டத்தில்  ஆட்சியில் இருந்த தி மு க  வின் செயலற்ற தன்மைதான் பேசுபொருளாக மாறும் அது அ தி மு க விற்கு வாக்குகளாக மாறும் இதுதான் சட்டசபை தேர்தலிலும் நடந்தாது

உண்மையில்  கருணாநிதிக்கு பயமெல்லாம் ஜெயலலிதாவின் மேல்தான் அதனால் தான் இந்த டெசோவெல்லாம்  ஆளும் கட்சி இதை பயன்படுத்தி வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும்

என்னை பொருத்தவரை சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராத அளவுக்கு  ஆளும் கட்சி இதை ஆதரிக்கிறது

ஏனென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்தால் கருணாநிதி அதை வைத்து அரசியல் செய்துவிடுவார்.”

சுட்டது  என் மனவானில்   ரதி  அவர்களின் தளத்திலிருந்து.

Thursday, February 21, 2013

காவிரி பிரச்சனையின் பின்னணி (1891 முதல் 1990 வரை) பகிர்வு



தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைப் பிரச்சனையாக விளங்குவது காவிரி நதிநீர்ப் பிரச்சனை. 1892 ஆம் ஆண்டு மற்றும் 1924 ஆம் ஆண்டைய ஒப்பந்தங்கள் காவிரியில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்றாமல், 1960-களின் பின் பகுதியிலும், 1970-களின் தொடக்கத்திலும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும், காவிரி நதியில் உரிமையுள்ள மாநிலங்களை கலந்து ஆலோசிக்காமலும், தன்னிச்சையாக பல்வேறு அணைக்கட்டுகளை கர்நாடக அரசு கட்டியது. ஆண்டுக்காண்டு விவசாய நிலங்களின் பரப்பினையும் கர்நாடகா அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனையடுத்து, 1956-ஆம் ஆண்டைய மாநிலங்களுக்கிடையே ஆன நதிநீர்த் தாவா சட்டத்தின்படி நடுவர் மன்றமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு ஒரு கடிதத்தினை அனுப்பியது.
இந்தக் கடிதத்தின் மீதும் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1986 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சிக்காலம். இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருள்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்புச் சங்கத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், உணர்வுப் பூர்வமான இந்தப் பிரச்சனை குறித்து நடுவர் மன்றத்தை ஏற்படுத்துமாறு 1990 ஆம் ஆண்டு ஓர் உத்தரவினை பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவினைத் தொடர்ந்து, 1986-ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில், தமிழக அரசால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு உயிர் ஊட்டும் வகையில், நடுவர் மன்றத்தை ஜூன் 1990 ஆம் ஆண்டு மத்திய அரசு உருவாக்கியது.
நடுவர் மன்ற தீர்ப்பு (1991)
இந்த காவிரி நடுவர் மன்றம், 25.6.1991 அன்று பிறப்பித்த இடைக்கால ஆணையில், மேட்டூர் அணைக்கு 205 டி.எம்.சி. அடி நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், கர்நாடகா தனது நீர்த் தேக்கங்களிலிருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்றும், கர்நாடகா தனது பாசனப் பரப்பை 11.20 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவாக்கம் செய்யக்கூடாது என்றும், இடைக்கால ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி, மாதாந்திர மற்றும் வாராந்திர அடிப்படையில் தமிழகத்திற்கு நீர் விடுவிக்க வேண்டும் என்றும், இந்த இடைக்கால ஆணை இறுதித் தீர்ப்பு அளிக்கும் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தால் அளிக்கப்பட்ட இந்த இடைக்கால ஆணை தமிழகத்திற்கு சாதகமாக இல்லை என்ற போதிலும், காவிரி பாசன விவசாயிகளின் உடனடி நலன் கருதியும், மாநிலங்களுக்கிடையே நல்லுறவு நிலவ வேண்டும் என்ற எண்ணத்தோடும், இறுதி ஆணையில் கூடுதலாக நீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், தமிழ்நாடு அரசு இடைக்காலத் தீர்ப்பினை ஏற்றுக்கொண்டது.
ஆனால், கர்நாடக அரசோ, காவிரி நடுவர் மன்ற ஆணை கர்நாடகத்தை கட்டுப்படுத்தாது என்று தெரிவித்து, இடைக்கால ஆணையினை அவமதிக்கும் வகையில் ஓர் அவசரச் சட்டத்தினை இயற்றியது. அதனை எதிர்த்து, எனது தலைமையிலான தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இடைக்கால ஆணை செல்லும் என்றும், கர்நாடக அரசின் அவசரச் சட்டம் செல்லாது என்றும் 22.11.1991 அன்று மத்திய அரசுக்கு கருத்துரை வழங்கியது. பின்னர் எனது தலைமையிலான அரசின் உறுதியான நடவடிக்கை காரணமாக 10.12.1991 அன்று காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை மத்திய அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது.
நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடகா அரசு!
இருப்பினும், காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணைப்படி ஒருமுறை கூட கர்நாடகா நமக்கு தண்ணீரை விட்டதில்லை. மாறாக, உபரி நீரை மட்டுமே கர்நாடகா விடுவித்து வந்தது. கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கு காரணமாக, மரபுரிமைப்படி இயல்பாக நமக்குக் காவிரி நதி நீரில் பாசனத்திற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை நாம் வற்புறுத்திக் கேட்டுப் பெறுகின்ற சூழ்நிலைக்கும், நீதிமன்றங்களுக்குச் சென்று ஆணையைப் பெறுகிற சூழ்நிலைக்கும் அவ்வாறு பெற்ற ஆணை மதிக்கப்படாத நிலையில், பயிர்களைக் காப்பாற்ற மத்திய அரசை வற்புறுத்தி நமது உரிமைகளைப் பெறுகிற சூழ்நிலைக்கும் தமிழ்நாடு பலமுறை தள்ளப்பட்டு இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், 5.2.2007 அன்று காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி ஆணையை வெளியிட்டதோடு, இந்த ஆணையை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்கவும் பரிந்துரை செய்துள்ளது. நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், 14.6.2011 அன்று பிரதமரை புதுடெல்லியில் நேரில் சந்தித்து, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும், இந்த ஆணையை நடைமுறைப்படுத்த காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றினை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.
கெஜட்டில் வெளியிடாத மத்திய அரசு
இதனைக் கடிதங்கள் வாயிலாகவும் பிரதமரை நான் பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன். காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட தடை இல்லாத சூழ்நிலையில், "உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வந்தபிறகு தான் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட முடியும்" என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.
நடுவர் மன்றத் தலைவரை நியமிக்காத அலட்சியம்
இந்தச் சூழ்நிலையில், நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடவும், மேலாண்மை வாரியம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை ஏற்படுத்தவும் மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் உள்ள மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவிரி நடுவர் மன்றத்தில் காலியாக உள்ள தலைவர் பதவியை நிரப்ப வேண்டியதன் அவசியத்தை பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது.
அதிமுக அரசும் காவிரி விவகாரமும்
இந்தச் சூழ்நிலையில், கர்நாடகா தனது கோடைக்கால பாசனத்திற்காக கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி மற்றும் ஹாரங்கி நீர்த் தேக்கங்களிலிருந்து தண்ணீரை பயன்படுத்தி வருகிறது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை மூலம் தமிழகத்தின் குறுவைப் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காது என்பதைக் கருத்தில் கொண்டு, 21.3.2012 அன்று உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றினை எனது தலைமையிலான அரசு தாக்கல் செய்தது. இந்த மனுவில், கர்நாடகா கோடைப் பாசனத்திற்கு தனது 4 அணைகளிலிருந்து தண்ணீர் விடுவிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும், இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி இந்த 4 நீர்த் தேக்கங்களிலிருந்து 103.24 டி.எம்.சி. அடி நீருக்கு மேல் கர்நாடகா பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், கர்நாடக அரசு அதன் கோடைக்கால பாசனத்திற்காக 1.2.2012 முதல் நீரை உபயோகித்துள்ளது என்றும், நீர்த்தேக்கங்களுக்கு வரக்கூடிய நீர்வரத்தினை தேக்கி வைத்துக் கொண்டு, நீர்தேக்கங்கள் நிரம்பும் நிலையில் மட்டுமே நீரை கர்நாடகா விடுவித்து வருவதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்து குறுவை சாகுபடி பாதிப்புக்கு உள்ளாகிறது என்றும் சுட்டிக்காட்டி, விரைந்து காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தினை கூட்டுமாறு பிரதமரை 18.5.2012 நாளிட்ட கடிதத்தின் மூலம் நான் கேட்டுக் கொண்டேன். ஆனால், பிரதமர் இதற்கு செவி மடுக்கவில்லை.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு....
இதனையடுத்து, தமிழ்நாட்டுடன் குறிப்பிட்ட விகிதாச்சாரப்படியான அளவில் நீரைப் பகிர்ந்து கொள்ள கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், காவிரி கண்காணிப்புக் குழுவினால் இறுதி செய்யப்பட்டுள்ள இடர்ப்பாடு பங்கீட்டு முறைக்கு ஒப்புதல் வழங்கும் வகையில் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தினை கூட்ட உத்தரவிட வேண்டியும் உச்ச நீதிமன்றத்தில் 21.7.2012 அன்று எனது தலைமையிலான அரசு ஓர் இடைக்கால மனுவினை தாக்கல் செய்தது. தமிழகத்தில் நிலவும் இடர்ப்பாட்டினை சுட்டிக்காட்டி, குறுவை சாகுபடியை தமிழக விவசாயிகள் இழந்துவிட்ட நிலையில், குறைந்தபட்சமாக ஒரு போக சம்பா சாகுபடியையாவது விவசாயிகள் மேற்கொள்ள ஏதுவாக, தமிழகத்திற்குரிய நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்குமாறு பிரதமரை 23.8.2012 நாளிட்ட கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டேன்.
எனது தலைமையிலான அரசு எடுத்த உறுதியான தொடர் நடவடிக்கையினை அடுத்து, உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் காரணமாக காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் 19.9.2012 அன்று புது டெல்லியில் கூட்டப்பட்டது.12.9.2012 முதல் காவேரி நதிநீர் ஆணையக் கூட்டம் நடைபெறும் வரை நாள்தோறும் வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீரை கர்நாடகா தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 10.9.2012 அன்று ஆணைப் பிறப்பித்தது.
நதிநீர் ஆணையக் கூட்டம்
19.9.2012 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தில், இடர்ப்பாடு காலத்தில் நீரை பகிர்ந்து கொள்ளுதல் கணக்கீட்டுப்படி, தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரில் குறைபாடான 48 டி.எம்.சி. அடி நீரை நாளொன்றுக்கு 2 டி.எம்.சி. அடி வீதம் 24 நாட்களுக்கு உடனடியாக திறந்துவிட வேண்டுமென்றும், நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி கர்நாடகா தொடர்ந்து நீரை விடுவிக்க ஆணை பிறப்பிக்குமாறும் நான் வலியுறுத்தினேன். கர்நாடகா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
இந்தக் கூட்டத்தில் இரு தரப்பினரிடையே ஒத்த கருத்து ஏற்படாத சூழ்நிலையில், 20.9.2012 முதல் 15.10.2012 வரை நாளொன்றிற்கு வினாடிக்கு 9,000 கன அடி வீதம் கர்நாடகா தமிழகத்திற்கு நீரை விடுவிக்க வேண்டுமென்றும், அதன் பிறகு கண்காணிப்புக் குழு 15.10.2012 அன்று கூடி சம்பந்தப்பட்ட மாநிலங்களை கலந்தாலோசித்து 15.10.2012-க்கு பிறகு நீர் விடுவிப்பது குறித்து முடிவெடுக்கலாம் என்றும் காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவரான பிரதமர் அறிவித்தார்.
ஆனால், கர்நாடக அரசு இதனை ஏற்க மறுத்தது. தமிழகத்திற்கு சாதகமான முடிவினை பிரதமர் அறிவிக்காததைக் கருத்தில் கொண்டும், பிரதமர் அறிவித்த குறைந்தபட்ச தண்ணீரைக் கூட விடுவிக்க முடியாது என்று கர்நாடகா அறிவித்ததை கருத்தில் கொண்டும், எனது எதிர்ப்பினைத் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தை மீண்டும் அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை என்று நான் அறிவித்தேன்.
இதனையடுத்து, நாளொன்றிற்கு 2 டி.எம்.சி. அடி வீதம் 48 டி.எம்.சி. அடி தண்ணீரை அடுத்த 24 நாட்களுக்கு கர்நாடகா தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டும் என்றும் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்திற்கு நீரை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவேரி நதிநீர் ஆணையத்தின் தலைவர் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும் என்று 28.9.2012 அன்று தீர்ப்பளித்தது. இதன்படி, 29.9.2012 முதல் நீரினை விடுவிக்கத் துவங்கிய கர்நாடகா, திடீரென்று தன்னிச்சையாக 8.10.2012 அன்று தண்ணீர் விடுவிப்பதை நிறுத்திவிட்டது.
நீதிமன்ற அவதூறு வழக்கு
இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்ட கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை 10.10.2012 அன்று எனது தலைமையிலான அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்தச் சூழ்நிலையில் 11.10.2012 அன்று காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், நீர்விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள குறைபாட்டு நீரான 48 டி.எம்.சி. அடி நீரை நாளொன்றுக்கு 2 டி.எம்.சி. அடி வீதம் 24 நாட்களுக்கு திறந்துவிட வேண்டுமென்றும், கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற ஆணையை மதிக்காததால், உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் தமிழகத்திற்கு ஏற்பட்டது என்றும், இடர்ப்பாடு ஆண்டிலும் கர்நாடக அரசு நீரை அதன் நீர்த்தேக்கங்களிலிருந்து தனது பயன்பாட்டிற்காக விடுவித்துள்ளது என்றும் தெரிவித்து, தமிழ்நாட்டின் சம்பா பாசனத்திற்காக 15.10.2012 முதல் 16.2.2013 வரை சுமார் 145 டி.எம்.சி. அடி நீர் தேவைப்படும் என்று தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
எனினும், கர்நாடகத்தின் 4 அணைகளில் போதுமான நீர் இருப்பு இருந்தபோதிலும், தமிழகத்திற்கு மேலும் தண்ணீர் வழங்க இயலாது என கர்நாடகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கண்காணிப்புக் குழு கூட்ட முடிவுகள்
இருப்பினும், 16.10.2012 முதல் 31.10.2012 வரையிலான காலத்திற்கு 8.85 டி.எம்.சி. அடி நீரை கர்நாடகா தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டும் என்று காவிரி கண்காணிப்புக் குழுவின் தலைவர் தனது முடிவினை அறிவித்தார். இந்த முடிவு தமிழகத்திற்கு எதிரானது என்றும், இடர்ப்பாடு காலத்தில் தமிழ்நாட்டிற்குரிய பங்கான 48 டி.எம்.சி. அடி குறைபாடு நீரை கணக்கில் கொள்ளாமல் 15 நாட்களுக்கு மட்டும் நீரை அளிக்க உத்தரவிட்டது சரியானது அல்ல என்றும் தமிழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த குறைந்தபட்ச நீரை கூட கர்நாடகா விடுவிக்க மறுத்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில், கர்நாடகத்தின் பிடிவாதப் போக்கை எதிர்த்து தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு 30.10.2012 அன்று விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பான அனைத்து அம்சங்களையும் பரிசீலனை செய்து பரிந்துரை செய்ய வேண்டும் என காவிரி கண்காணிப்புக் குழுவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, 31.10.2012 அன்று புது டெல்லியில் நடைபெற்ற காவிரிகண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், 31.10.2012 வரை 8.85 டி.எம்.சி. அடி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டும் என்று கண்காணிப்புக் குழு 11.10.2012 அன்று உத்தரவிட்டதில், 2.15 டி.எம்.சி. அடி தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது என்றும், காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையின்படி, 2012 நவம்பர் மாதம் முதல் 2013 பிப்ரவரி வரை தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும் தமிழகத்தின் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட கண்காணிப்புக் குழு, 16.10.2012 முதல் 31.10.2012 வரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரில் உள்ள பற்றாக்குறையான 2.15 டி.எம்.சி. அடி தண்ணீரை 4.11.2012-க்குள் விடுவிக்குமாறும், 1.11.2012 முதல் 15.11.2012 வரையிலான காலத்திற்கு 3.94 டி.எம்.சி. அடி தண்ணீரை விடுவிக்குமாறும், ஆக மொத்தம் 6.09 டி.எம்.சி. அடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிடுமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும், உச்ச நீதிமன்ற ஆணைப்படி, தமிழ்நாடு, கண்காணிப்புக் குழுவிற்கு அளிக்கவிருக்கும் கோரிக்கைகள் குறித்தும், தமிழகத்திற்கு மேற்கொண்டு தண்ணீர் விடுவிப்பது குறித்தும் 15.11.2012 அன்று நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று காவேரி கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், சம்பா சாகுபடியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், தமிழகத்திற்கு உள்ள உரிமையை எப்படியாவது பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் எனது அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார் ஜெயலலிதா.

Wednesday, February 20, 2013

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியானது


காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, கர்நாடகாவின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி இன்று அரசிதழில் வெளியானது.
காவிரி நடுவர் மன்றம் விசாரணை செய்து இரு மாநிலங்களும் தண்ணீர் பகிர்ந்து கொள்வது குறித்து இறுதித் தீர்ப்பளித்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு இன்று அரசிதழில் வெளியானது. இதையடுத்து அரசாணையின் நகல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரள மாநில அரசுகளுக்கு இன்று அரசாணையின் நகல் வழங்கப்படும்.
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், தமிழகத்துக்கு 419 டிஎம்சி தண்ணீர் காவிரியில் வழங்கப்பட வேண்டும். கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி தண்ணீரும், கேரளாவுக்கு 30 டிஎம்சியும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் அளிக்கப்பட வேண்டும் என்றும் இறுதித் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டதால், நதிநீர் பங்கீடுகள் தானாகவே சட்ட நடைமுறைக்கு வந்து விடும். நடுவர் மன்றத் தீர்ப்பை மாற்ற யாருக்கும் உரிமையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தினமணி

Friday, February 08, 2013

காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீடு


பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் செலுத்த வேண்டிய கட்டணத்தை அரசே ஏற்கும் என்று நான் ஏற்கெனவே தெரிவித்ததற்கு இணங்க, டெல்டா பகுதிகளில் உள்ள 5 லட்சத்து 45 ஆயிரம் விவசாயிகளுக்கான 27 கோடியே 67 லட்சம் ரூபாய் பயிர்க் காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தியுள்ளது.  பயிரிழப்பை அளவிட்டு, விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிவாரணம் மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து நிதி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் நான் பின் வருவனவற்றை இந்த மாமன்றத்திற்கு அறிவிக்கின்றேன்.
மத்திய அரசின் பேரிடர் நிவாரண வரையறைபடி, நெற்பயிரை இழந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு, 2,429 ரூபாய் மட்டுமே நிவாரணமாக வழங்க இயலும்.  மாநில பேரிடர் நிவாரண  வரையறைபடி, ஏக்கர் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் மட்டுமே நிவாரணமாக வழங்க இயலும்.  இருப்பினும், இந்த 4,000 ரூபாய் நிவாரணத் தொகை, 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று நான் ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.  இதுவன்றி, பயிர் இழப்புக்காக காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து ஏக்கர் ஒன்றுக்கு, 8,692 ரூபாய் வரை பெற இயலும் என்றும் தெரிவித்து இருந்தேன். இங்கே பல உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியுள்ளபடி, காப்பீட்டு நிறுவனம், குசைமய அடிப்படையில், 5 கிராமங்களைத் தெரிந்தெடுத்து, ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு அறுவடை சோதனைகளை மேற்கொண்டு, அந்த சோதனை முடிவுகளின் அடிப்படையிலும்; கடந்த மூன்று ஆண்டுகளில் கிடைக்கப் பெற்ற சராசரி விளைச்சலின் அடிப்படையிலும்; காப்பீட்டு நிவாரணத் தொகையை நிர்ணயிக்கும். இவ்வாறு, காப்பீட்டு நிவாரணத் தொகையை நிர்ணயம் செய்யும் போது 100 விழுக்காடு மகசூல் இழப்பு ஏற்பட்டால் தான், ஒரு ஏக்கருக்கு முழுக் காப்பீட்டுத் தொகையான 8,692 ரூபாய் கிடைக்கும்.  50 விழுக்காடு மகசூல் இழப்பு ஏற்பட்டால், ஒரு ஏக்கருக்கு சுமார் 4,350 ரூபாய் தான் காப்பீட்டு நிவாரணத் தொகையாக கிடைக்கும். மேலும், சோதனை அறுவடை செய்து முடிக்கப்பட்டு, காப்பீட்டு நிவாரணத் தொகை பெறுவதற்கு தாமதம் ஏற்படும்.  இதனைத் தவிர்க்கும் வகையில், 50 விழுக்காட்டிற்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு முழு காப்பீட்டு நிவாரணத் தொகையை முன் கூட்டியே தமிழக அரசு வழங்கும். இதன்படி, 50 விழுக்காட்டிற்கு மேல்  மகசூல் பாதித்துள்ள 1 லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகளின் 3.61 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு, 15,000 ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும். அதாவது, பேரிடர் நிவாரணம், வேளாண் பயிர்க் காப்பீடு, மற்றும் சிறப்பு கூடுதல் நிவாரணம் என மொத்தமாக, ஏக்கர் ஒன்றுக்கு 15,000 ரூபாய் உடனடியாக விவசாயிகளுக்கு எனது தலைமையிலான அரசால் வழங்கப்படும். இதனால், அரசுக்கு 541 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
காவேரி டெல்டா விவசாயிகள் அனைவருக்கும் தமிழக அரசே பயிர்க் காப்பீட்டுத் தொகையை செலுத்தியுள்ளதால், 50 விழுக்காட்டிற்கும் குறைவாக பயிரிழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கும், அந்தந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள சராசரி பயிரிழப்புக்கு ஏற்ப, காப்பீட்டு நிவாரணம் வழங்கப்படும். காப்பீட்டு நிறுவனத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றவுடன், இந்த நிவாரணம் வழங்கப்படும்.

Sunday, February 03, 2013

அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள்




அரிக்கன் விளக்கு
காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.
அம்மி
குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்.
அண்டா
அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.
அடுக்குப்பானை
ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர்.
அடிகுழாய்
கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய்.
ஆட்டுக்கல்
வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம்.
அங்குஸ்தான்
தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை.
ஓட்டியாணம்
பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளிப் பட்டையால் செய்யப்பட்ட ஒருவகை ஆபரணம்.
எந்திரம்
(அரிசி, உளுந்து முதலிய தானியங்களை அரைக்கவோ உடைக்கவோ பயன்படுத்தப்படும்) கீழ்க்கல்லில் நடுவில் உள்ள முளையில் சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட வட்டவடிவச் சாதனம். இதைத் திரிகல், திரிகை, இயந்திரம் என்றும் கூறுவர்.
உரல்
வட்ட வடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப் பகுதியை உடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுத்துவதுமான கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம்.
உரி
(வீடுகளில் பால், தயிர், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்புவடிவ அமைப்பு.
குஞ்சம் - குஞ்சலம்
(பெரும்பாலும் பெண்களின் சடையில் இணைத்துத் தொங்கவிடப்படும்) கயிற்றில் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப்பந்து போன்ற அலங்காரப் பொருள்.
கூஜா
(குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும்) புடைத்த நடுப்பகுதியும் சிறிய வாய்ப் பகுதியும் அதற்கேற்ற மூடியும் கொண்ட கலன்.
கோகர்ணம்
(ரசம், மோர் முதலியவற்றை ஊற்றப் பயன்படும் விதத்தில்) ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒருவகைப் பாத்திரம்.
கொடியடுப்பு
ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும் கொண்ட அமைப்பு.
சுளகு
வாய்ப்பகுதி குறுகளாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும், முறத்தைவிடச் சற்று நீளமான) ஒரு சாதனம்.
தாவணி
(இளம் பெண்கள் அணியும்) ஒரு சுற்றே வரக்கூடிய அளவுக்கு இருக்கும் சேலையின் பாதி நீளத்திற்கும் குறைவான ஆடை.
தொடி
பெண்கள் தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்து கொள்ளும் பிடித்தாற்போல் (அழுத்தம்) இருக்கும் அணி வகை.
நடைவண்டி
(குழந்தை நடைபழகுவதற்காக) நின்று நடப்பதற்கு ஏற்றவகையில் மரச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட விளையாட்டுச் சாதனம்.
பஞ்சமுக வாத்தியம்
கோயில்களில் பூஜையின் போது வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டிருப்பதுமான, பெரிய குடம் போன்ற ஒரு தாள வாத்தியக் கருவி.
பாக்குவெட்டி
(பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) சற்றுத் தட்டையான அடிப்பகுதியையும் வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய மேற்பகுதியையும் கொண்ட சாதனம்.
பிரிமணை
(பானை போன்றவை உருண்டுவிடாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அடியில் வைக்கும்) பிரிகளைக் (வைக்கோல்) கொண்டு வளையம் போல பின்னப்பட்ட சாதனம்.
புல்லாக்கு
மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடப்படும் பெண்களின் அணி வகைகளுள் ஒன்று.
முறம்
(தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சு முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம்.
லோட்டா
நீர் குடிப்பதற்கான நீள் உருண்டை வடிவக் குவளை.
மரப்பாச்சி
பெண் குழந்தைகளுக்கான, மனித உருவம் செதுக்கப்பட்ட மரப் பொம்மை.
மின் சாதனங்கள் வந்துவிட்ட பிறகு இத்தகைய நம் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் எல்லாம் இப்பொழுது அழிந்துகொண்டே வருகின்றன. முக்கால்வாசி புழக்கத்தில் இல்லை என்றே கூறலாம். அவற்றையெல்லாம் சேமித்து, பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதை நினைவில் நிறுத்துவோம்.
தொகுப்பு: சிவமானசா

நன்றி : தினமணி

Thursday, January 24, 2013

தஞ்சாவூரும் தண்ணீர்பஞ்சமும்


இயற்கை பொய்த்துவிட்டது. காவிரியும் வற்றிவிட்டது. கதிர்கள் பால் பிடிக்காமல்  காய தொடங்கிவிட்டது.
காய்ந்த வயல்களை பார்க்கவே சிரமம்.



போர்செட்காரர்களை அணுகி தண்ணீர் இறைப்பவர்கள் இறைத்து கொண்டிருக்க வாய்க்கால் பாசனத்தை நம்பி மட்டுமே விவசாயம் செய்தவர்களின் நிலைமை மோசம்

ஒரு பக்கம் அறுவடை ஆரம்பித்துவிட்டது.  சன்ன நெல்ரகங்கள் தனியார் வியாபாரிகளிடம் போட்டியில் நிற்க மோட்ட நெல்ரகங்கள் கேள்வியில்லாமல் இருக்கிறது.

விவசாயிகளின் மனதில் தமிழகஅரசு இழப்பீடு எப்பொழுது அறிவிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பில் சாதாரண விவசாயிகளுடன் சேர்ந்து அறுவடை செய்து நன்றாக லாபம் சம்பாதித்த விவசாயிகளும் அடக்கம்.

அரசு மௌனம் காக்க மக்களின் மனதில் எதிர்பார்ப்பும் கூடிகொண்டேயிருக்கிறது.

தமிழக அரசு காவிரியில் நீர் தர மறுத்த கர்நாடக அரசிடம் இழப்பீடு கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக செய்தி.

இன்னும் சிலமாதங்கள் பொறுத்திருப்போம்.

முன்பதிவு

Tuesday, December 25, 2012

தஞ்சாவூரும் தண்ணீர் பஞ்சமும்

வயலில் நட்ட  நெற்பயிர்கள் முக்கால்வாசி  சூழலை தாண்டி வந்து  நெற்மணிகள் கருபிடிக்கும் சூழலில் உள்ளது. தட்டு  தடுமாறி இதுவரை  நட்டவயல்களுக்கு தண்ணீர் கிடைத்துவிட்டது.

இனிதான் தண்ணீர் மிக அவசியம்  என்ன ஆகப்போகிறதோ என்கிற கவலை விவசாயிகள் மனதில் தோன்ற ஆரம்பித்துவிட்டது.


போர்செட் பம்புகள் வைத்திருப்பவர்களுக்கு கவலை இல்லை. வாய்க்கால் பாசனம் செய்பவர்கள் தண்ணீருக்காக போர்செட்காரர்களை அணுகி வியாபாரம் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு ஏக்கருக்கு ரூ 1500 அல்லது மூன்று மூட்டை நெல் என்கிறப்படி பேரம் பேசிகொண்டுள்ளார்கள். இது ஏற்றதாழ்வுகளுக்கு  மற்றும் மனிதநேயத்துக்கு உட்பட்டது.

மழை இதோ பெய்துவிடும் அதோ பெய்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்துகொண்டே  இருக்க  ஒரு மழையுடன் தன்  இருப்பை வெளிகாட்டி வானம் மூடிகொண்டது.

குறுவை சாகுப்படி போர்செட் விவசாயிகளுக்கு பெருத்தலாபத்தை தனியார் வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு  விளைந்த இடத்துக்கே போய் எடுத்து கொண்டு  கொடுக்க சாதாரண வாய்க்கால் விவசாயிகளுக்கு சம்பா கை கொடுத்துவிடும் நம்பிக்கையில் கடன் வாங்கி செய்தவர்கள் நிறையவே  இருக்கதான் செய்கிறார்கள்.

 இன்னும் சில  மாதங்களில்  இயற்கை என்ன செய்யபோகிறது? அரசாங்கம் என்ன செய்யபோகிறது என்று   பார்ப்போம்.

Tuesday, June 28, 2011

பாவம் , பாவம் செய்த தெய்வங்கள்



தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான ஊர்களில் பழைய  கோவில்களும் உண்டு.  தெருவுக்கு ஒரு கோவில்என புதிததாய் முளைத்த பலகோவில்கள் உண்டு.

கிராம அய்யர்கள்நகரங்களுக்கு  தேவையான வருமானம் கருதி இடம்பெயர்ந்து விடுவதால் கிராமங்களில் பெரிய கோவில்கள் தவிர அய்யர்கள் தட்டுபாட்டினால்சிறு கோவில் தெய்வங்கள்   வாரம்  ஒரு முறை குளிக்கும பூ வைத்து பொட்டு வைத்து கொள்ளும்.

அய்யர்கள் தட்டுபாட்டினால் ஒரு கிராம அய்யர் குறைந்தது சிறு சிறு பத்துகோவில்கள்  தன்கட்டபாட்டில் வைத்திருப்பார்கள். அங்கு அவர் வருகை தினசரி என்றெல்லாம் இருக்காது.

அப்படி அவர்  தினசரி வருகை புரிந்து கோவில் தெய்வத்தை குளிபாட்ட வேண்டுமென்றால்  மாதம் இவ்வளவு என்று சம்பளம் பேசிக்கொடுத்துகோவில்  விசேசநாட்களில் அவர் ஏற்பாடு செய்யும்சிறப்பு பூசைகள் யாகங்களுக்கு அந்தபகுதி மக்கள் ஒத்துழைப்பு கொடுத்துநடத்தினால் அந்தகோவில் கோவிலாக இருக்கும் இல்லாவிடில்  இருண்ட கோவில் தான் அது.

இன்றைக்கு தமிழகத்தின் நிறையகிராமங்களில்  உள்ள சிறு சிறு கோவில்கள் அழிந்தும் புதிததாய் முளைத்து கொண்டும் தான் இருக்கின்றன.

அய்யர் ஒருவர் பிடித்து வைத்துள்ள பத்துகோவில்களில் அதுவும் ஒன்று. சிறிய சிவன் கோவில் அது. அர்ச்சனை செய்ய நிறையமக்கள்  கோவிலுக்கு வெளியே நின்றிருந்தார்கள். மாலை ஆறு மணியாகியும் கோவில் திறக்கப்படவில்லை.

கோவில் சாவி வைத்துள்ள பெரியவர் விரைந்து வந்தார்  இன்றைக்கு அய்யர் வரமாட்டார் என்று சொல்ல
விளக்கு மட்டும் போடவந்தவர்கள் விளக்கு ஏற்றிச்செல்ல அர்ச்சனை அந்தபெரியவரே செய்தார்.
கருவறைக்கு வெளியிலே நின்றுகொண்டே பூவை  கருவறையின் உள்ளே இருக்கும் தெய்வத்தின் மீது தூக்கி எறிந்தார்.
ஏற்கனவே காய்ந்த பூக்கள் சிதறிகிடந்தது. வெளியில் இருந்தவாறே தேங்காய் உடைத்து சூடம் காட்டினார்.
மந்திரங்கள் கிடையாதுஅர்ச்சனை முடிந்தது.

அய்யர் கட்டுபாட்டில் உள்ளகோவில்களில் வருமானம் அதிகம் உள்ள தெய்வங்களுக்கு சிறப்புகவனம் செலுத்தப்படும். வருமானம் வராத கோவில்களின் தெய்வங்களுக்கு அய்யர்களின் பராமுகம் நிரந்தரம்

பாவம் , பாவம் செய்த தெய்வங்கள்.

Sunday, June 12, 2011

இன்றைய முதல்வர் கடந்த முதல்வர் அடுத்து யார்?



பயண த்தின் இ டையே     ரசாங்க அ  லுவலகத்தைப்பார்த்தேன்.   அ லுவலகத்தின்  வெளிப்புறத்தில் ” அம்மா” வின் முகம் ப்ளக்ஸில்தெரிந்தது.

அ ம்மா ஆ  ட்சியில் எ ன்று திட்டங்கள் பட்டியல் இ டப்பட்டிருந்தன.

இதுவே தேர்தலுக்கு முன்பு பார்க்கும் அரசுஅலுவலகங்களில் எல்லாம்  ”கலைஞர்”  முகம் தான்எங்கும் ஐந்து வருடமாக  எங்கும் இருந்தவர் இன்று கிழிந்து தொங்குகிறார்.

கலைஞரின்விளம்பர ப்ளக்ஸ் அனை த்தும்  மளிகைசாமான்கள் காயப் போட பயன்படுகிறது.

” அம்மா ” விளம்பர ப்ளக்ஸ்  நாம் வெறுக்க அல்லது கிழிந்து தொங்குவதைப் பார்க்க இன்னும் ஐந்துவருடங்கள் பொறுத்து இருக்கவேண்டும்.

இவர்களின் இருவர்முகங்கள் மக்களுக்கு பார்த்து பார்த்து போரடித்து  விட்டது.

நாம் முதல்வராய் வேறு முகங்கள் பார்க்கவேண்டும் என்றால் அந்ததகுதி அடுத்தது யாருக்கு????


பலவீனம் அடைந்துகிடக்கும் தி.மு.க.வின் மு.க.ஸ்டாலினா??!!  அல்லது வளர்ச்சியின் படிக்கட்டில் இருக்கும் தே.மு.தி.க. வின் கருப்பு எம்.ஜி. ஆ ரா??!!
தெரியவில்லை.


இன்னும் ஐந்து வருடங்களுக்கு நாம்  பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் பொறுத்துதான்  ஆக வேண்டும்.

பார்க்கலாம் இன்றைய முதல்வரின் நாளையசெயல்பாடுகளையும் கடந்த முதல்வரின் கட்சியின் செயல்பாடுகளையும்…..

Sunday, December 19, 2010

பாமர விவசாயி -2ஜியும்



2G  யை ப்பற்றி தெரியாத  விவசாயி  இருவர். கலைஞர் தெரியும் கனிமொழியை தெரியும் . ஆர்.ராசா வை   இப்பொழுது தான் தெரியும்.

என்னங்க  ஆயிரம் கோடி ரூபாயா கொள்ள அடிச்சுப்புட்டாங்க ...உண்மை தாங்களா...

டி்வி் போட்டு போட்டு காட்டுறாங்க என்னங்க அது.

இன்னொ  ரு விவசாயி       நீ வேற  இலட்சம் கோடிக்கு மேலன்னு சொல்லுறாங்க...

கலைஞருமாங்க செஞ்சாரு இத...

எல்லாருக்கும் பங்கு வராமாய டி.வி.  ல்ல  போடுறான்.

நிவாரணம் கொடுப்பாங்களா..

போனாவாட்டி மாதிரி கெடையாது. அந்தந்த வயல பாத்துதான் கொடுப்பாங்கன்னு சொன்னாங்க...

இன்சூரன்ஸ் கட்டுன்னு பணம்.

தஞ்சை மாவட்டத்துல தான் பாதிப்பே  இல்லேன்னு சொல்லுறாங்க...

பாதிச்ச வயல் மட்டுதான்கொடுப்பாங்க போலிருக்கு..

தேர்தல் வருதுல்ல   கலை ஞரு ஒரு தள்ளு தள்ளுவாருன்னு சொல்லிகிட்டாங்க..

அத நம்பிதான்  இன்சூரன்ஸ் கட்டிருக்கேன்.

அட ஏங்க...போன  மழைக்கு முத மழை பேஞ்சுதுல்லஒரு பயிரு   அழிஞ்சு போவாத  பெரும் விவசாயிய்க  இலட்ச  கண   க்குல  நிவாரணம்  வாங்குனாவோ.....

என்னமோ   பாப்போம் மேல  உக்காந்துகிகட்டு  இலட்சம் கோடின்னு சாதரண  மா   அடிக்கிறான்.

நாம   ஏக்கருக்கு ஆயிரம் அறிவிப்பானா...ஐயாயிரம் அறிவிப்பானா அவன் வாய்ய  பாக்க வேண்டியது தான்.

LinkWithin

Related Posts with Thumbnails