Showing posts with label தமிழகஅரசு. Show all posts
Showing posts with label தமிழகஅரசு. Show all posts

Thursday, January 24, 2013

தஞ்சாவூரும் தண்ணீர்பஞ்சமும்


இயற்கை பொய்த்துவிட்டது. காவிரியும் வற்றிவிட்டது. கதிர்கள் பால் பிடிக்காமல்  காய தொடங்கிவிட்டது.
காய்ந்த வயல்களை பார்க்கவே சிரமம்.



போர்செட்காரர்களை அணுகி தண்ணீர் இறைப்பவர்கள் இறைத்து கொண்டிருக்க வாய்க்கால் பாசனத்தை நம்பி மட்டுமே விவசாயம் செய்தவர்களின் நிலைமை மோசம்

ஒரு பக்கம் அறுவடை ஆரம்பித்துவிட்டது.  சன்ன நெல்ரகங்கள் தனியார் வியாபாரிகளிடம் போட்டியில் நிற்க மோட்ட நெல்ரகங்கள் கேள்வியில்லாமல் இருக்கிறது.

விவசாயிகளின் மனதில் தமிழகஅரசு இழப்பீடு எப்பொழுது அறிவிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பில் சாதாரண விவசாயிகளுடன் சேர்ந்து அறுவடை செய்து நன்றாக லாபம் சம்பாதித்த விவசாயிகளும் அடக்கம்.

அரசு மௌனம் காக்க மக்களின் மனதில் எதிர்பார்ப்பும் கூடிகொண்டேயிருக்கிறது.

தமிழக அரசு காவிரியில் நீர் தர மறுத்த கர்நாடக அரசிடம் இழப்பீடு கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக செய்தி.

இன்னும் சிலமாதங்கள் பொறுத்திருப்போம்.

முன்பதிவு

Wednesday, August 10, 2011

ஆசிரியர்கள தேர்வு எழுத சொல்லுங்க...


இன்று தினமணி செய்திதாளின் தலையங்கத்தில்எது சமச்சீர் கல்வி?  என்ற தலைப்பில் ஆசிரியர்களையுடைய தரத்தை   பரிசோதனை செய்ய  யோசனை  சொல்லி உள்ளார்கள்.



“பள்ளிகளில் மாணவர்களை மதிப்பீடு செய்வதைப் போல, ஆசிரியர்களின் கற்பித்தலையும் மதிப்பீடு செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. தற்போது சமச்சீர் கல்வியால் ஒரே பாடத்திட்டம் என்பதால், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை, அந்தந்தக் கல்வி மாவட்ட அளவில், பொது வினாத்தாள் மூலம் (ஒரே வினாத்தாளில் ஆங்கிலம், தமிழில் கேள்விகள் இருக்கும் வகையில் தயாரித்து) தேர்வு நடத்தி, விடைத்தாள்களை வேறு பள்ளிகளில் கொடுத்து திருத்திப்பெற்று, ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை உருவானால் மட்டுமே, மக்கள் நம்பிக்கையுடன் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வருவார்கள்.”

செய்தியின் சுட்டி இங்கே…


இந்த அரசு செய்யவேண்டிய மிகமுக்கியமான   மிக அவசரமான காரியமும் கூட….

இதையெல்லாம் இந்த அரசுக்கு  எடுத்துரைப்பவர்கள் எடுத்துரைத்தால் நன்றாக இருக்கும்.

தமிழக ஆசிரியர்களில் நிறையபேருக்கு கற்பித்தல் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் எந்தவிதத்திலும் தங்களை அப்டேட் செய்து கொள்வதே கிடையாது.

தமிழக  அரசு உடனடியாக அமுல்படுத்தினால் நன்றாகத்தான் இருக்கும்.

செய்வார்களா…..???!!!

Friday, January 28, 2011

உணர்வுத்தீ


பசி பொ றுக்கா
குழந்தை
முகம் பார்க்கும்
மனைவி
தேவை களின்
பெருக்கம்
மீனாய் காசு
வலை  வீசி
மீன் பிடிக்க
சிறு படகில்
கடல் உ ள்ளே..
தரையில் தெரியும்
கோ டு
தண்ணீ ரில்
தெரியாது போக
அது
அ வ ர்கள் எல்லை யாம்
தோட்டாக்களை
துப்பிய துப்பாக்கி
அலை களினால்
இல வசமாய்
சவ ப்பயண  ம்
கரையோ ரம் ஒ துங்கிய
மீனவ னின் சவம்
கையலாகத  அ ரசின்
சாட்சி!!

LinkWithin

Related Posts with Thumbnails