Showing posts with label நாட்டியம். Show all posts
Showing posts with label நாட்டியம். Show all posts

Thursday, January 31, 2013

யசகானம்




சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே ஆடப்பட்டு வரும் யஷ கானம் தென்னிந்தியாவின் தொன்மையான கிராமியக் கலைகளில் ஒன்று.

கர்நாடக மாநிலத்தின் பிரதான நாட்டியநாடக வடிவமாக இருந்தாலும் யஷகான நிகழ்ச்சிகள் வடகேரள மாநிலத்திலும்  ஆந்திராவிலும் கூட நடத்தப்படுகின்றன.

இந்து புராணங்களின்படி குபேரன் செல்வத்துக்குக் கடவுளாகக் கருதப்படுகிறார். அமரர் உலகில் வசிக்கும் குபேரனது ஊழியர்களான யஷர்கள் பாடும் பாடலே  யஷகானம் என்று சொல்லப்பட்டாலும் வேதங்கள்இதிகாசங்கள் மற்றும்புராணங்கள் போன்றவை சாமானிய மக்களை எளிதில் சென்று அடைவதற்காக பாடல் , ஆடல் மற்றும் வசனங்களுடன் உருவாக்கப்பட்ட கலையே யஷகானமாகும்.

தீயவை ஒழிந்து நல்லவை தெய்வ சக்தியால் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் என்றுமே நீங்காமல் நிறைந்துள்ளது. யஷகானம் ராமாயண மகாபாரத மற்றும் இந்து புராணக்கதைகளாகவும் அவற்றில் இடம் பெற்ற நிகழ்ச்சிகளாகவும் அமைந்துள்ளது. ராவண சம்ஹாரம் கீசகவதம் மகாபாரத யுத்தம் பிரஹலாத சரித்திரம் சபரி பக்தி ஆகியவை பிரபலமான சில யஷகான கதைகள்.

யஷகானம் ஆலய மண்டங்களிலும் செல்வந்தர் வீடுகளிலும் ஆடப்படுகிறது. ரங்கஸ்தலா என்று அழைக்கப்படும் யஷகான மேடை மாவிலை மலர்கள் வாழைமரங்கள் தென்னை ஓலையின் குருத்துகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலத்துடன் காணப்படுகிறது.

-காஷ்யபன்-

Monday, August 08, 2011

மயிலின் நாட்டியம்


காலை 7.30  மிதமான காலைவெயில்  மெல்லியதாய்  குளு குளு காற்று வீசி கொண்டிருந்தது.

ஐந்தரை அல்லது ஆறடி தோகையுள்ள ஆண்மயில்கள் இரண்டு விளையாடி கொண்டிருந்தது.

மயில்கள் என் அனுபவத்தில் திருச்சி விராலி மலைபக்கம் அ திகம் இருக்கும் என்றும் சொல்ல கேள்விபட்டுள்ளேன். தொலைகாட்சியில் பார்த்திருக்கிறேன். நேரடியாக தஞ்சை  சிவகங்கை பூங்காவில் தோகை இல்லாத மயில்களை பார்த்தது.

வானாந்திர அழிப்பினால் மயில்கள் தங்க இடம் இல்லாது
கும்பலாய்எங்கள் ஊர் பகுதிகளில் சகஜமாய் நடமாடுவதை பார்க்கமுடியும்.

மயில்கள் நாட்டியம் நான் நேரில் பார்த்தது இல்லை. இன்றைக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

தன்னுடைய ஐந்தரைஅடி தோகையை விரித்து அதுஆடிய ஆட்டமும் அதன் தோகையில் இருந்த அதன் கலர்கண்கள் காலை வெயில்பட்டுஎதிரொலித்தஅதனுடைய ஜொலிப்பு....அய்யோ...என்ன தவம் செய்துவிட்டேன்  இதை கண்டு மகிழ என்றிருந்தது.

மெதுவாக தன்னுடைய தோகையை  விரிக்க விரிக்க என்னுடைய  கைகள் தனாக கைகூப்பி இயற்கையை வண  ங்கதான் தோன்றியது.

LinkWithin

Related Posts with Thumbnails