வேடங்கள் வாழ்வாகி
வெகுதூரமாய் உண்மை
தோன்றி யவை நினைக்க
எல்லாம் சரி
நியாயம் கற்பித்த
மனது
மனதின் ஆழத்தில்
மறைந்த உண்மை
இன்பம் துன்பமும்
எனை பயம்செய்ய
அமைதி இழந்தவனாய்
நான்.
எண்ண அலைகள்
வருவதுமாய் போவதுமாய்
வந்து சென்றவை
பலவாய்
ஒன்றும் அறியாது
எதுவும் நடக்காது
கடலாய் மனது
ஓயாத அலைகளாய்
மேலே
உள்ளே செல்ல
தோன்றா அலைகள்
அமைதியாய் கடல்
ஆரவாரமில்லா மனது.

எல்லாம் வல்ல
மனது
நினைத்தவை
தூரம் இருக்கையில்
வேண்டும்
வேண்டும்
விரும்பும் மனது
நெருங்கையில்
கண்டும் காணாது
தூர விலகி
விலக விலக
விரும்பி
நெருங்க நெருங்க
விலகி
தூரம் நிற்கையில்
கவர்ந்து
அருகில் போக
தூர நிற்கும்
எல்லாம் வல்ல
மனது.