Tuesday, April 12, 2011

சருகும் உடலும்….



மரமொ ன்றில்
உதிர்ந்த சருகு
காற்றடித்த திசையெல்லாம்
பறந்தது
எண்ண  ங்கள் இல்லாது
உண  ர்வுகள்சுவை 
இல்லாது
கால்கள்பயணித்த
திசையெங்கும்
பயண ம்
உறவில் ஒட்டிய
மரத்தின்
கடமைகள் முடித்து
தன் சாரம் இழந்து
நிறம்மாறி
காற்றின் போக்கில்
தொடர்பு அறுத்து
சுதந்திரமாய்
தன்போக்கில்
சருகும்
உடலும்….

Saturday, April 02, 2011

இன்றைக்கு...


அஞ்சா நெஞ்சன் மு.க.அழகிரியின் பாதுகாவல் வாபஸ் பெறப்பட்டது  இன்றைய 
ஹா ட்.  

தேர்தலுக்கான  சுவடே தெரியவில்லை .   ஒரு ஆ ட்டோவில் தி. மு.க. வின் சாதனை களை ச் சொல்லி ஒதுக்கப்பட்ட கூட்டணி கட்சிக்கு வாக்குகள் கேட்டார்கள். 

வாழ்க தேர்தல் கமிசன்.  நிறைய நடைமுறை தொ ந்தரவுகளில் இருந்து பொதுமக்கள் விடுதலை  .

இன்று உலககோப்பை கிரிக்கெட் இறுதி ஆ ட்டம். சம உரிமை கொடுத்து பாதுகாக்க படவேண்டியவர்களாலேயே பந்தாடப்படும் தன் சக உயிர்ப்புகளுக்காக  வானம் வெளித்த பின்னும் ஹே  மா உலகக் கிண்ண க்கிரிக்கெட்2011….
என்ற தலைப்பில் கவிதை  இந்தியாவே வெல்லட்டும்  சிங்களர்கள் வெல்லவேண்டாம் என்று தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார்.

கோடை வெயில் தெருவழியே தினசரி ஐஸ்வண்டிகாரன் பிள்ளை களுக்கு தான் குதுக்கலம். அய்…பால் ஐஸ் …பால் ஐஸ்… வெயிலில் தின்றால் சளிப்பிடிக்கும் வேணாம் பாப்பா என்று அம்மாவின் குரலை  அலட்சியம் பிள்ளை கள் ஐஸ் விற்பவனை   ஓடி போய் கூப்பிடும்.

சில வீடுகளில் பிள்ளைகளுக்கு விழும் தர்ம அடிக்கு ஐஸ்காரன் தான் பொறுப்பு.

இன்னும் சில பெற்றோ ர்கள்  ஐஸ்காரனை  மிரட்டிவிடுவார்கள்.   தினமும் இந்த தெருவழியே வரக்கூடாது என்று தடைப்போடுவார்கள். 

முனகி கொண்டே நகரும் ஐஸ் வண்டிக்காரன்.    

இன்றைய  பொழுது இப்படியாய் இருந்தது.   

LinkWithin

Related Posts with Thumbnails