Monday, March 14, 2016

இந்தவார புகைப்படதொகுப்பு

இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது  அம்மரத்தின் பக்கம் திரும்பாமல்  போகமுடியாது   பூக்களின் நிறம்  தானாக பார்க்க வைத்து விடும்
அவசியம் ஒரு க்ளிக் செய்து விடவேண்டும் என்று க்ளிக்கியது.


படத்தை க்ளிக்கியதும் நடந்தபாதையில்  அட..என்னய புடிப்பான்னு  இவங்க ஒரு  பார்வை பார்க்க ..அவங்களையும் ஒரு க்ளிக்....


டப்புன்னு ஒரு மூடு வரும் காத்து வாங்கிட்டு வரலாமுன்னு வண்டிய எடுத்துட்டு  வயபக்கம் போன  புகை மூட்டத்துடன் கூடிய ஆரஞ்சு தீச்சுவாலை..அட என்னடா அதுன்னு கிட்டக்க போனா...கரும்பு கொல்லையில கரும்பு தோகையை கொளுத்தி வைக்க அந்த இடமே வெளிச்சமாய் ஞாபகமா இருகட்டுமேன்னு ஒரு க்ளிக்...


இந்த வாரத்தில் ஒரு நாள் காலை வேப்பங்குச்சி உடைக்க போனப்ப அழகா மலர்திருந்தாங்க..


Friday, March 11, 2016

கருத்து சித்திரம் பகிா்வு - தி இந்து

பல நூறு  வாா்த்தைகள் விளக்குவதை ஒரு  சித்திரம் விளங்க வைத்துவிடும்.


Wednesday, March 09, 2016

இ-மெயில் கண்டுபிடிப்பு உண்மையும் பொய்யும் .

உண்மை எது?

பொய் எது?

கடந்த சில நாட்களுக்கு முன் படித்த செய்தி இ-மெயில் கண்டுபிடித்தது
ரேமண்ட் டாம்லின்சன்.

அதே செய்தி இப்பொழுது மறுக்கப்படுகிறது. இ-மெயிலை கண்டுபிடித்தது அமெரிக்க வாழ் தமிழர் சிவா அய்யாதுரை. அவர் அதற்கான காப்புரிமையும் வைத்துள்ளார்.

இதுவும் ஊடகங்களின் வழியாகவே  தெரியவருகிறது. ஊடகங்களின் நம்பகதன்மை ?  இதுபோன்ற விசயங்களின் உண்மை த்தன்மை எவ்வாறு அறிவது??

செய்தி வெளியிடும் முன் அதுபற்றி விரிவாக ஆராயமாட்டார்களா அல்லது வேண்டுமென்றே பரப்ப படுகிறதா தெரியவில்லை.

இ-மெயிலை கண்டுபிடித்தவர் யாரென்று தெரியாததால் ரேமண்ட் கண்டுபிடித்தார் ஊடகங்கள் சொல்லியதால் நம்புகிறேன்.

கண்டுபிடிப்பு காப்புரிமை உடையவர் எதிர்கருத்து பரப்பாவிடில் நான் முதலில் படித்த செய்தி உண்மையாக நினைத்துக்கொண்டிருப்பேன்.

அறிவியல் நேர்மை சம்மந்தப்பட்டது. அப்படியிருக்க இப்படியும் செய்திகள்.

இச்செய்தி உண்மை அல்ல என்று தெரிந்தவர்கள் உடனே தனது கருத்தை ஏதோ சமூக ஊடகத்தின் மூலம் பரப்பினால்  செய்தியின் நம்பகதன்மை கேள்விகுறியாகிவிடும்.

கண்டுபிடிப்பாளரே கண்டுபிடித்து  மறுப்பு தெரிவித்தல் என்பது அவர்களுடைய  சூழ்நிலை பொறுத்து அமைவதாகிவிடும். பொய் உண்மையாக நாமும் சந்தர்ப்பம் அமைத்து க்கொடுத்தது போல் ஆகிவிடும்.

அமெரிக்க வாழ் தமிழன் கண்டுபிடிப்பு  ..ஆகா..தானாய் வந்த மகிழ்ச்சி..கண்டுபிடிப்பின் உரிமை  இந்தியன்  கருப்பு நிறத்தவன் புலம்பெயர்ந்தவன் என்பதால் மறுக்கப்படுமானால் மிகவும் கண்டிக்கப்படத்தக்கது.

தொடர்புடைய  செய்தி

இ-மெயிலை கண்டுபிடித்தது நான்; அங்கீகாரம் வேறொருவருக்கா?- தமிழர் சிவா அய்யாதுரை ஆதங்கம்






LinkWithin

Related Posts with Thumbnails