Thursday, July 28, 2011

மாற்றம் வேண்டி....


இரண்டுநாள் குற்றாலம் போய் வர வாய்ப்பு கிடைத்தது.  வருடம் முழுவதும் ஒரே இடம்  . மாற்றம் வேண்டி மனது நினைக்கும் ,சூழல்கள் அமையாவிடில் இரண்டுநாட்கள்  அதே இடம் அதே மனிதர்கள்.

பொம்மை கடையில்...


மலையும் மலைச்சார்ந்த இடமும்


மனிதர்கள் இல்லா மலையும் மலைச்சார்ந்த இடமும் பார்க்கும் பொழுது எண்ணங்கள் அவ்வளவு இல்லாத மனதில் உட்கார்ந்த அமைதி.



பறத்தலில் ஓய்வு


மழையும் மழைசாரலுமாய் பயணம்.

கொட்டும் அருவி மழைமுகட்டில் தங்கியிருந்த மேகங்கள் மழையில் நனைந்த  மரங்களின் பசுமைஅழகாய் தான் இருந்தது.



கொட்டும் அருவியில் தலை நனைத்து உடலும் நனை கையில்சிலிர்த்த உடலும் மனமும், முண்டியடித்த கூட்டம் அருவிக்குள்  எனை தள்ள மூச்சு முட்டி எதிர்மனிதர்களை பலம் கொண்டு தள்ளி கொண்டே வெளியில் வந்துமூச்சை இயல்பாக்கியப்பொழுது எழுந்த நிம்மதி.

நடைமுறை வாழ்க்கைக்கு தினந்தோறும் கடமைகள் வருடம் முழுவதும் தேவை என்றாலும் வருடத்தில் சிலநாட்கள் அதையெல்லாம் தவிர்த்து செல்லும் மாற்றம் உடலுக்கும் உள்ளத்துக்கும் தேவையாகவே ப்பட்டது.

Friday, July 22, 2011

வித்தியாசமான மியாவ் - சுந்தர ராமசாமி




எனக்கு தெரிந்த பூனை ஒன்று
நேற்று இறந்தது
சவ அடக்கத்துக்கு
நாங்கள் போயிருந்தோம்
என் நண்பனின் மனைவி
அழத் தொடங்கியபோது
என் மனைவியும் அழுதாள்
குழந்தைகள்  அழுதன
சில வார்த்தைகள் பேசும்படி
என் நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான்
நான் பேசத் தொடங்கினேன்:
“ இந்தப் பூனையின் மியாவ் மியாவ்
வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து
வித்தியாசமானது
மேலும்…

என்ன சொல்லவர்றார் …?! சிந்திக்காத செம்மறியாட்டு கூட்டமுன்னு சொல்லவர்றாரா  சுந்தரராமசாமி.

LinkWithin

Related Posts with Thumbnails