Thursday, March 31, 2016

ஊர் சுற்றி - புகைப்பட தொகுப்பு

நீண்ட வரிசையில்  செல்லும் பல மின்கம்பிகளில் ஒன்றில் தனிமையில்  அமர்ந்திருந்த ஒற்றை காக்கையும்  சூரிய உதயம் காண காலைவேளையில் பயணித்த ஒரு காலையின் சூரியோதயம்  பங்குனி மாத திருவிழா ஒன்றில் மின்அலங்கார  தேவி மற்றொரு காலை  பயணத்தில் மற்றொரு சூரியோதயம் இருக்கும் இடத்தில் மறைந்த சூரிய அழகும் காலைவெயில் சாப்பாட்டு மேசையின் மீது பூச்சாடி   காலை தஞ்சைபயணத்தில் இளைப்பாறிய இடத்தில் இலைகள்  உதிர்த்த மரம்  கடைகாக்கும் பூட்டுகள்.











Monday, March 28, 2016

கோடைவெயில் சில காட்சிகள்

மேகங்களின்
தடை இல்லா
சூரிய வெளிச்சத்தில்
தவித்தபடியே
ஓடும்
செருப்பில்லா சிறுவன்
குட்டையும்
நெட்டையுமாய்
வியர்வையில் நனைந்த
பள்ளி சிறுவர்களும்
சிறுமிகளும்
தோளில்
ஒரு பிள்ளை
கையில் மறுபிள்ளை
கடைத்தெரு
செல்லும் தாய்
வெள்ளை மேகம்
ஒன்று கடந்து போக
வெயில் சூட்டுக்கு
சிறிது இடைவெளி
கண்கள் மட்டும்
தெரிய
முழுக்க மூடிய
கருப்பு உடையில்
சிரித்தபடியே
செல்லும்
கல்லூரி பெண்கள்
வெயிலாவது..!!
வெப்பமாவது..!!
உழைத்தால் காசு
வியர்வை வழிகிறது
சுமை இழக்கும்
தட்டு வண்டிக்காரர்
கோடை வெயில்
காய்கிறது.

Thursday, March 24, 2016

சுசீலா ராமன் பாடல் புதிய அனுபவம்

சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் நண்பரின் வழியாக  “ வேல் உண்டு வினையில்லை ” பக்திபாடல் வீடியோவாக வந்து விழுந்தது.

ஓட விட்டுப்பார்த்தேன் யாரென்று தேடி ஓடினேன் இணையத்துக்கு ..

சுசீலாராமன்  வீடியோபாடல் அதுவாக தஞ்சை ப்பூர்விகமாய் லண்டன்வாழ் தமிழராக இசை ஆல்பத்தில் அசத்துகிறார்.

தமிழ் பக்தி பாடல்களை  வேறுவிதமாகப் பாடிய அவருடைய குரல்வளம் கிரேட்ங்க..

ஓரே மாதிரியாக க்கேட்ட பாடலை வேறு இசையிலும் வித்தியாசமான குரலிலும் கேட்டது புதிய அனுபவத்தை க்கொடுத்தது.

அவரை பற்றி மேலும் அறிய..
https://en.wikipedia.org/wiki/Susheela_Raman

அவருடைய இசையை நீங்களும் கேட்டுப்பாருங்களேன்.


LinkWithin

Related Posts with Thumbnails