விலங்குகள் வாழும்
நாட்டில்
மனிதத்தை தேடுகிறோம்
இனப்பாகுபாடாய்
வதம்
மனிதம் அழிகிறது
பசிக்கு இரைத்தின்னும்
விலங்குகளுக்குநடுவில்
மனிதம் அழிவது
உண்மை
விலங்குகள்
கத்தும் ஊளையிடும்
சத்தங்கள் யாவும்
சர்வதேசத்து
செய்தியாய்…
ஈழத்தமிழர் நிலையை நேரில் கணடறிய தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை பயணம். அதுவும் அதிபர் ராஜபக்சே அழைப்பை ஏற்று இலங்கைக்கு பயணம்.
தமிழக எம்.பி.க்கள் குழு பயணத்தினால் துயரப்படும் இலங்கை தமிழர்களுக்கான தீர்வுஎன்ன கிடைத்துவிடும்.
இலங்கை தமிழர்களின் துயரத்தை வெளிப்படுத்தாத ஊடகங்கள் இல்லை எழுதாத பத்திரிக்கைகள் இல்லை.
அரசாங்க ரீதியான இந்த தமிழக எம்.பி.க்கள் குழு என்ன செய்து விட முடியும்.
மூடியிருந்த கண்களை மேலும் கருப்பு துணியை கட்டி தன்னுடைய இன துஷ்பிரயோகங்களை காணவிடாதபடி தடுக்கதான் தமிழக எம்.பி.க்கள் குழுவை ராஜபக்சே அழைத்துள்ளார் போலும்.
அனுப்பிய முதல்வருக்கு வெளிச்சம் அழைத்த ராஜபக்சேவுக்கு வெளிச்சம்.