Showing posts with label இலங்கை தமிழர்கள். Show all posts
Showing posts with label இலங்கை தமிழர்கள். Show all posts

Monday, April 30, 2012

கலைஞரும் ஈழமும்



கடந்த சில நாட்களாக  செய்திதாள்களில் தொடர்ச்சியாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  ஈழம் பற்றிய அறிக்கைகள் தினசரி வந்த கொண்டேயிருக்கிறது.

இவரது அறிக்கைகளை  படிக்கையில் ஏதோ மனது குறுகுறுக்கிறது.

தன்னுடைய சொந்த லாபத்துக்காக அன்று பேசாதவர் இன்று எவ்வாறு பேசலாம்?   என்று எதிர்ப்பு அறிக்கைகள் கொடுத்தும் இருக்கிறார்கள்.

இன்றைக்கும் அவருடைய சொந்தகணக்குகளின் பின்னணியில் தான் இத்தகைய அறிக்கைகள் அல்லது தமிழகம் தன்னை மறந்துவிட கூடாது என்பதற்காக வாய் திறக்கிறாரா தெரியவில்லை.

நம்ஈழதமிழ் மக்கள் அனுபவித்து முடித்துவிட்டார்கள் இனியும் என்ன இருக்கிறது அனுபவிக்க???

கருணாநிதி அரசியல் செய்கிறார் ஏனென்றால் அவரது தொழில் அது?  தொழிலில் லாபம் மட்டுமே பார்க்ககூடியவர் அவர்.

Saturday, October 10, 2009

தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை பயணம்

ஈழத்தமிழர் நிலையை நேரில் கணடறிய தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை பயணம். அதுவும் அதிபர் ராஜபக்சே அழைப்பை ஏற்று இலங்கைக்கு பயணம்.

தமிழக எம்.பி.க்கள் குழு பயணத்தினால் துயரப்படும் இலங்கை தமிழர்களுக்கான தீர்வுஎன்ன கிடைத்துவிடும்.

இலங்கை தமிழர்களின் துயரத்தை வெளிப்படுத்தாத ஊடகங்கள் இல்லை எழுதாத பத்திரிக்கைகள் இல்லை.

அரசாங்க ரீதியான இந்த தமிழக எம்.பி.க்கள் குழு என்ன செய்து விட முடியும்.

மூடியிருந்த கண்களை மேலும் கருப்பு துணியை கட்டி தன்னுடைய இன துஷ்பிரயோகங்களை காணவிடாதபடி தடுக்கதான் தமிழக எம்.பி.க்கள் குழுவை ராஜபக்சே அழைத்துள்ளார் போலும்.

அனுப்பிய முதல்வருக்கு வெளிச்சம் அழைத்த ராஜபக்சேவுக்கு வெளிச்சம்.

LinkWithin

Related Posts with Thumbnails