கட்டங்களுக்குள் நகரும் வாழ்வு. பரந்து விரியும் யோ சிப்புகளுக்கு நடுவே சில எல்லைகளை தாண்டமுடியாத வாழ்வு.
யாரும் எவரும் அவரவர்களின் மன விரிவாக்கத்திற்கு தகுந்த மாதிரி தான் யோ சிப்பும் வெளிப்பாடுகளும்எல்லாமும் வாழ்வில் நடந்தவை சிலவாகவும் நடக்காதவை பலவாகவும் இருப்பது உண்மை.
நம்குடும்பத்தில் நமக்கு சரியாக தெரியும் ஒன்றை நடைமுறை படுத்திவிடலாம் என்று யோ சிக்கையில் ஒரு குடும்ப நபரின் முரண்பாடு மொ த்தகாரியத்தையும் சிதைத்துவிடும்.
சமுதாயம் என்று வரும்போது அதிகாரத்தில் உள்ளதனிமனித விருப்புகளும் வெறுப்புகளும் முக்கிய பங்காற்றும் அது ஆதரவோ அ ல்லது உயிர்பழிவாங்கலோ எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம்.
எத்தனை விதமான பார்வை களை அ வர்கள் தெரிந்து வைத்திருந்தாலும் அ த்தனையும் சரியாய் சமுதாயத்திலும்கையாளப்படுகிறதா என்பது சந்தேகம் தான்.
கோடிகளை அமுக்கும் அரசியல்வாதிகளாகட்டும் இனவதை செய்யும் அதிபராகட்டும் அவனுடைய முதல்தகுதி தனி மனிதன் இதில் தன்னுடைய குழுமம் தான் பிரதானம்அதற்கு பிறகு தன்னை சார்ந்தவர்கள் என்றே விரிவடைகிறது. மற்றவையெல்லாம் சாதாரணம் தான்.
இதன் அடிப்படையிலேயே குழிதோண்டல்களும் உயிர்பழிவாங்கல்களும் சொத்து சேர்ப்புகளும் மற்றஎல்லாவிதமான நல்ல கெட்ட செயல்களை யும் வரலாறு பதிவு செய்கிறது.
ஏதோ நம்மால் இயன்றவரை நம்மளவில் நாம்.....
நமக்காக
நம்மை சேர்ந்தவருக்காக முடிந்தால் செய்து முடித்து நம்மை சேராதவருக்காகவும் நாம் விரிவடைய வேண்டியது தான்.






