Friday, December 09, 2011

சுயமே சொர்க்கமாகி



நீர் நிரம்பி உடைந்து போன  என் வயல்வரப்புகளை  சரிசெய்யவே   நேரம் சரியாய் போனது.

பெரியாறு  அணை   ப்பற்றி  அறியமுடிந்தது.  அதனைப்பற்றிய செய்திகளில் ஆர்வம் இல்லாமலசொந்த பிரச்சனைகளில்மூழ்கியே   வெளிவர வழிதேடுகையில் கழிந்தகாலங்கள்.

ஓர் ஆறுதல் நமக்காக பேசதானே நாம் நம்முடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தோம் அவர்கள் பார்த்துகொள்வார்கள் இவ்விசயங்களை என்று சற்றே நிம்மதி அடைகையில்அவர் வாங்கிய சொத்துகளில்  தன்னை தற்காத்து வழிதேட நம் பிரச்சனை பின்னுக்கு போனது.

நம்மில் சிறந்தவர்கள் குரல் கொடுக்க இவர்கள் கண்விழிப்பது இயல்பாக போய்விட்டது.

வாழ்வே சுமையாகி ஆகிப்போனதால் வந்தவினை.

சுயமே சொர்க்கமாகிப் போக    நாம் என்பதே  தேடக்கூடிய   ஒன்றாகி விட கட்டுகள் அவிழ்த்த ஓர் தனி மனித சுதந்திரம் எப்பொழுது...????

Saturday, December 03, 2011

கட்டுபாடு



கட்டுபாடுகளினால்
சிதைந்த வாழ்வு
கட்டுபாடுகளினால்
வளமானது
நோக்கங்கள் தான்
சிதைவும்
வளர்ச்சியும்
உண்டாக்க
கட்டுபாடு இயற்கையாய்….

Monday, November 21, 2011

ஓடியப்படியே தான்



சொல்ல தெரியாதகாரணங்கள் செயல்கள் நடைப்பெறுகின்றன. வாழ்வின் அடிப்படை தேவைகளுக்கான ஓட்டத்தில் அடிக்கடி நடைப்பெறும் நிகழ்வுகள் நினைவிருந்தும் ஒதுக்கி வைக்கப்படுகின்றன.

அன்றாட நிகழ்வுகளில் நிறைய போராட்டங்கள் நிறைய உழைப்பு நான் வாழும் சமுதாயத்தில் என்னை  அப்பொழுது தான் ஒட்டவைத்து கொள்ளமுடிகிறது.

ஓடியப்படியே தான் வாழ்க்கையும் ஒடுகிறது.

LinkWithin

Related Posts with Thumbnails