Friday, October 29, 2010

நேசி



பூக்களை நேசிக்க
கற்றுக்கொள்
பறிக்க அல்ல...

மனிதர்களை நேசிக்க
கற்றுக்கொள்
உதவிக்காக அல்ல..

உணர்வுகளின்
உந்துதலில் உயிர்ப்பு
நேசி..!

Thursday, October 28, 2010

இது எப்பொழுது?



சமுதாய மாற்றத்தின் முதல் தொடக்கம் தனிமனித  மாற்றத்தில் தான்.

தன்னளவில் தனக்கு  போதுமான அளவிற்கு பொருள்  இடம் என்று வந்தவுடன்  தன்னுடைய பார்வை யை  அடுத்து சிரமப்படும் சக உயிர்ப்பின்  மீது தொடங்கினால் அவர்களால்பயன்பெறுபவர்கள் பல போ்.

இந்த மனோபாவம் அரிது.  சொல்வது  அதைபற்றி எழுதுவது அல்லது அதைப்பற்றி வாதிடுதல்  மிக எளிது.

நாம் வாழுகிற இடத்தில்  பலவித குறைப்பாடுகள் உண்டு. யாரும் மறுக்கமுடியா உண்மை.

இத்தகைய குறைப்பாடுகளிலிருந்து  மேல் வந்தவர்கள் தான். சமுதாயத்தை ப்பற்றி  அதிகம்  கவலை படுபவர்கள்அல்லது   வாதிடுபவர்கள்.

சமுதாயத்திற்காக செயல்படுபவர்கள் எத்தனைப்பேர் ?   இதுவும் அரிது.

 தன்னளவில் நிறைவடைந்தவர்கள் எல்லை  விஸ்தரிப்பு செய்யாது மேற்கொண்டு  விலை  உ யர்ந்த ஆடம்பரங்களுக்கு காசு தேவை   என்று செல்லாது சமுதாயத்தின்  மீது  அக்கறை கொண்டபவர்களாக   மாறினால் மாற்றம் நிச்சயம்.

இது எப்பொழுது?

Monday, October 25, 2010

தலை இல்லா தட்டான்

சிலு சிலுத்த
ஓடியவாய்க்கால்
காற்றின்  போக்கில்
பறந்து விழுந்த
தட்டான்
உடல் இருக்க
சிறகு இருக்க
தலை இல்லா
தட்டானின் பயணம்
சிரமம் இல்லாது
வாய்க்காலின்  போக்கில்
உடைந்த விழுந்த கிளை
பயணத்தடை யில் தட்டான்
காற்று இருக்க
எதிர்ப்பாய்
தட்டானின் இயக்கம்
உடலில் காற்று
இல்லை
எதிர்ப்பு இல்லை
காற்றால் இழுத்து
செல்லப்படும் சறுகாய்
தட்டானின்உடல்.

LinkWithin

Related Posts with Thumbnails