Wednesday, March 30, 2011

ரகசியம்



மாற்றங்கள் தேடிய
எனது பயணத்தில்
புரியப்படாத
மர்மங்களாய் நிகழ்வுகள்
நெடிய தூரத்தின்
பயண   வாழ்வில்
எதிர்பாரா நிகழ்வுகளினால்
திக்கு முக்காடி
துயரப்பட்டு
காற்றின் வீச்சில்
அலை க்கப்பட்ட
ருகாய் வாழ்வு
முடிவு
கண்டுகொ ண்டதாய்
அலைய  ...
இன்னமும்
கண்டு கொ ள்ளப்படாமலே
வாழ்வு.  

கோடை


அக்கினி நட்சத்திரம் ஆ ரம்பிக்கும் முன்னே ஆ ரம்பித்த கோ டை.

காலை  பனியின் ஈரம், வயல் ஈரம் நம்பி பயிர் செய்த தானிய வகை செடிகள் வெம்மை  தாளாது வாட தொ டங்கின.

தர்பூசணி வண்டிகளின் நடமாட்டம் தெருக்களில் அதிகமாகியது. எலுமிச்சை பழ பயன்பாட்டினால் ரூபாய்க்கு மூன்று விற்ற எலுமிச்சை    ஒன்றுக்கு ரூபாய் ஐந்தனாது.

ரூபாய் ஐந்திற்க்கு விற்றும் அவசரத்திற்கு கிடைக்காத நிலைமை.   தினமும் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து தயாரிக்கப்பட்ட  நீர் மோ ரின் சுவை   திடீரென்று கிடைக்காத எலுமிச்சை பழத்தினால் ” சப்”  என்றாகியது.

தாறுமாறாய் ஓட தொ டங்கிய எண்ணங்களில் இறந்தகாலமும் எதிர்காலமும் நிறையவே இருக்க அடைந்த பாதிப்புகளும் அடையாத குறிகோள்களும் அதிகமாய் வாட்டி வதைத்தது.

குளுமை  தேவை  நீர் தேவை  நீர் இருக்கும்பொழுது வராத பொ றுப்பு  இப்பொழுது வந்தது கூட  கோபமும் வந்தது. தடைப்பட்ட மின்சாரத்தினால் விசிறிகளின் தேடல் தொடங்க இருந்த  விசிறிகளின் இயக்கம் தொடங்கியது.

வ ளமை  முக்கியமென்றால் கோடை  முக்கியம்.

கோடையை  வரவேற்று வெப்பத்தில் இளை ப்பாறுவோ ம்.

Monday, March 28, 2011

தாய்மை



சில நேரங்களில் சில வார்த்தைகள் மனதை  பாதித்துவிடும்  அ ந்தவகையில்  அண்மையில் படித்து என் மனதை பாதித்தஇக்கவிதை தாய்மை  என்ற தலைப்பில்..




 இதுவரை

பிரசவ வலிதான்

பெருவலி என

அறிந்திருந்தேன்

 "இச்சமூகத்தில்

பிரசவிக்காததுதான்

 பெருவலி'

தத்தெடுத்தபோது

 தங்கை சொன்னாள்!

-வானவன்-

LinkWithin

Related Posts with Thumbnails