Monday, September 30, 2013

கொஞ்சம் அரசியல்.

நாகை நகரம் பா.ஜ.க  என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்ட
வேன்கள் பா.ஜ.க. கொடி தாங்கி  நாகையிலிருந்து திருச்சி நோக்கி  விரைந்து சென்றுக்கொண்டிருந்தன.

மதியம் 12 மணியளவில் எனது இருசக்கர வாகனபயணம்  மிக கவனமுடன்  நிகழ்ந்தது.

இடையே இடையே மரநிழல்களில் ஒவ்வொரு வேனை நிப்பாட்டி தயாரித்த கொண்டு வந்திருந்த பட்டைசாதம் பாக்கு மட்டை தடடுகளில் விநோயிக்கப்பட்டது.

வருங்கால பிரதமர் … மோடி  குரொலிகளுக்கு குறைவில்லை.

அ.தி.மு.க.    , தி.மு.க. வண்டிகளின் அணிவகுப்பையே பார்த்த கொண்டிருந்த கண்களுக்கு  தமிழ்நாட்டில் பா.ஜ.க. எழுச்சி பொதுமக்கள் மக்கள் மத்தியில்   மோடி திருச்சிக்கு வருகை புரிந்த நாள் முழுவதும் விவாதிக்கப்பட்டு கொண்டிருந்தது.

மறுநாள் மறந்து போனார்கள் திருவாளர்கள் பொதுமக்கள்.

முந்தைய நாட்களில் பா.ஜ.க.   எங்கள் ஊரில் இருப்பதை அந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நாளில் மட்டுமே தெரிந்து கொள்ளலாம் .


இத்தகைய சூழலில்  இக்கட்சியின் திடீர் எழுச்சி    மோடியை மையப்படுத்தி தான் என்று சொல்வதில் ஒன்றும் மோசமில்லை   தான்.

Friday, September 27, 2013

4 வது நாள் அன்பு

அட…நேத்து குறிகோள் உடும்பு பிடியா பிடிச்சுங்கப்பா சொன்னாங்க…சரின்னு ஞாபக படுத்திகிட்டாச்சு.




நான்காவது நாள்  என்ன சொல்லப்போறாங்கன்னா நம் சுற்றியிருக்கிறவங்க கிட்ட  அன்போட இருக்கறது.

இதுக்கு ரெண்டு விதிய கட்டயாம கடைப்பிடிக்க சொன்னாங்க...

  1. நாம்மோட சொல்லிலும் செயலிலும் நேர்மையா இருக்கனும். மத்தவங்க நம்மள பத்தி குறை சொல்ல கூடாது.
  2.  நாம செஞ்சுப்புட்டு எதிர்பார்க்காம இருக்கோனும்.

வீணாகிற குடிநீர் குடிநீர் குழாய நிப்பாட்டுதல் வழியில கிடக்கிற ஆனிய தூக்கி அந்தான்ட போடுறது
சுற்றியிருக்கிறவங்க கிட்ட  சிரிச்ச முகமா இருக்கறது  இது மாதிரி சின்ன சின்ன விசயங்கள் நிறைய பெரிய மாற்றங்கள கொண்டு வருமுன்னு  அன்னக்குதான் அவனுக்கு தெரிஞ்சுது.

இவ்வளோ நாளா தெரியாம போச்சப்பா...பரவாயில்ல இன்னிக்கு தெரிஞ்சுகிட்டோம்ல இனி அப்படியிருக்கலமா?!

கட்டாயம் மாறி தான் ஆகனும்.


தொடரும்.

LinkWithin

Related Posts with Thumbnails