Sunday, December 05, 2010

காலத்தின் சக்கைகள்



காலசக்கரத்தின் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்கமுடியாது தன்னை விடுவித்து கொண்டவர்கள். செயல்களின் போக்கு தெரியும். காலத்தின் சக்கைகள் அவர்கள். பின்வருபவர்களின் வேகஓட்டத்தை நிதானப்படுத்தும் சக்கைகள் அவர்கள்.

தான் விதைத்ததை அறுவடை செய்து பலன் அனுபவிப்பவர்கள்.
நல்லதோ கெட்டதோ  அவர்களின்மனகுமுறல்கள் அவர்கடகுள்ளே உணர்ந்து அழிந்துபோனவர்களும் உண்டு
மனகுமுறல்களை   வெளியிட்டு ஆதரவு தேடியவர்களும் உண்டு.

பின்வருபவர்கள் பின்பற்ற நடந்தவர்களும் உண்டு .பின்வருபவர்கள் முகம் சுழிக்க செயல்பட்டவர்களும் உண்டு.

சங்கீதா     சீனிவாசன் கவிதை   ஒன்று

        முதியோர் இல்லத்தில்
        ஒரு தாயின் கண்ணீர்
       
        மகனே
        நீ இருக்க ஒரு
        கருவறை இருந்தது
        என்வயிற்றில்!
        
        ஆனால்
        நானிருக்க ஒரு
        இருட்டறை  கூடவா
        இல்லை
        உனது  வீட்டில்!           

Saturday, December 04, 2010

இருள் விடியல்


வாழ்வின் நிலையாமை
நிர்ணயிக்கும் தேடல்களில்
தட்டுபடாத
எனது நம்பிக்கைகள்
எதிர்கால நினைவுகளுடன்
இரவின் தூக்கம்
நிகழ்காலத்தில்
நான்  வாழ்ந்திராத
வாழ்வை   வாழ்ந்து
முடிக்க
இரவின் முடிவு
பகல் வெளிச்சமாய்
விடியலில்
எனது நம்பிக்கைகள்
நோக்கிய  
எனது பயணத்தில்
இருளும்
விடியலுமாய்...

Wednesday, December 01, 2010

அருளாசியை நான் தேடவில்லை

பல்வேறு திசைகளில் எனக்குள்ள பல்வேறு முனைப்புகளையும் பல்வேறு நபர்களுக்கு இடையில்
உள்ள இறுக்கங்களையும்  என்றாவது ஒரு நாள் என்னால் சரி செய்ய முடியும் என்று நான் எண்ணியதுண்டு . இப்போது
நானே அவையாகத்தான் இருக்கிறேன் என்பதை  நான் உண  ர்ந்து கொண்டுவிட்டேன். எனது தலைக்குள் இருக்கும் பாடலுக்கு மேலும் அருகில் நெருங்கி வருகிறேன் என்று நான் நிஜமாகவே உண  ர்கிறேன். அருளாசியை    நான் தேடவில்லை. அருளாசி என்னை த் தேடிக் கொண்டிருக்கிறது.

(போனோ  ,U2 வின்தலைமைப்பாடகர்)

வாழ்க்கை வெகுதூய்மையான   வீரசாகசமாகும். இதை எவ்வளவு முன்னதாக நாம் உணர்ந்து கொள்கிறோமோ   அவ்வளவு விரைவாக வாழ்க்கையை  ஒரு கலையாக நம்மால் பாவிக்க முடியும்.

(மாயா ஆ ஞ்சலோ   )

LinkWithin

Related Posts with Thumbnails