Friday, May 11, 2012

பாவம் இந்து மதம்…!!!??



இந்து மதம் தழைத்தோங்க பிறந்தவர்களின் சண்டை சச்சரவுகளில் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது.

இவர்களெல்லாம் இந்து மதத்தை காப்பாற்ற பிறந்த புண்ணியாத்மாக்கள்.  பாவம் இந்து மதம்…!!!??

கதவை திறந்து வைத்ததில் மதுரை  ஆதீனமாக மாறிவிட்டார்.

கௌ   ரவமான சொற்களினால் நீ ஒழுங்கா…நான் ஒழுங்கா… சொற்போர் நடத்திகொண்டுள்ளார்கள்.

தமிழகத்தின் தலையாய பிரச்சனையாக ஊடகங்களினால்  இப்பிரச்சனை பேசப்படுவது  எங்கே போய் சொல்ல....



Monday, April 30, 2012

கலைஞரும் ஈழமும்



கடந்த சில நாட்களாக  செய்திதாள்களில் தொடர்ச்சியாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  ஈழம் பற்றிய அறிக்கைகள் தினசரி வந்த கொண்டேயிருக்கிறது.

இவரது அறிக்கைகளை  படிக்கையில் ஏதோ மனது குறுகுறுக்கிறது.

தன்னுடைய சொந்த லாபத்துக்காக அன்று பேசாதவர் இன்று எவ்வாறு பேசலாம்?   என்று எதிர்ப்பு அறிக்கைகள் கொடுத்தும் இருக்கிறார்கள்.

இன்றைக்கும் அவருடைய சொந்தகணக்குகளின் பின்னணியில் தான் இத்தகைய அறிக்கைகள் அல்லது தமிழகம் தன்னை மறந்துவிட கூடாது என்பதற்காக வாய் திறக்கிறாரா தெரியவில்லை.

நம்ஈழதமிழ் மக்கள் அனுபவித்து முடித்துவிட்டார்கள் இனியும் என்ன இருக்கிறது அனுபவிக்க???

கருணாநிதி அரசியல் செய்கிறார் ஏனென்றால் அவரது தொழில் அது?  தொழிலில் லாபம் மட்டுமே பார்க்ககூடியவர் அவர்.

Saturday, March 31, 2012

பெற்றோரின் கண்ணீரில்




மகனே…
நீ பிறந்த அன்று
தோட்டத்தில்வைத்தோம்
ஒரு தென்னங்கன்று
எங்கள் வியர்வையில்
நீ உயர்ந்தாய்
நாங்கள் வார்த்த தண்ணீரில்
தென்னை வளர்ந்தது
எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம்
உணக்கு இன்பம் தருகிறது
இங்கே இருக்கும்தென்னைமரம்
எங்கள் இருவருக்கும்
சுக நிழலும் சுவைநீரும் தந்துதவுகிறது
ஒரு நாள்…
நீ ஈ மெயிலில் மூழ்கியிருக்கும் போது
எங்களை ஈ மொய்த்த செய்தி வந்துசேரும்
இறுதிப் பயணத்தில்
நீ இல்லாமற் போனாலும்
தென்னை ஓலை
எங்கள் கடைசி மஞ்சமாகும் !

(படித்தது)

LinkWithin

Related Posts with Thumbnails