Monday, June 06, 2011

பழசு


சிங்கத்தினுடைய   மாட்டு வண்டி வருகிறதென்றால் மற்ற  மாட்டுவண்டி ஓட்டிகளுக்கு பயம். ஒதுங்கி வழி கொடுத்துவிடுவார்கள். 

பூரணி காளைகள் பூட்டிய வைக்கோல் வண்டிதான் அ வனுடைய ஆயுதம் .  மற்றவர்கள் வைக்கோல் வண்டியை பள்ளம் பார்த்து இறக்கிவிடுவதில் இந்த சிங்கம் என்கிற சின்னைய்யன் மிகசாமர்த்தன்.

எதிர்ப்பவர்களை   உண்டு இல்லை என்று சொல்லக்கூடிய உடல்வாகு  வைக்கோல் வண்டியை  அவ னது காளையை ஓட்டும் அழகே..அய்யோ..இன்னும் கண்ணில் நிற்கிறது என்று அவனுடைய சமகாலத்து பெரியவர்பெருமூச்செறிந்தார்.

இன்றைக்கெல்லாம் அதுமாதிரியான மனுசங்க கெடையாது. வேளைக்கு பெரிய பித்தள  சட்டியில் ஒருபடி அரிசி  வடிச்சசாதம் சாப்பிடுவார்கள்.  கறி எடுத்த ஒரு சப்பை தான்  எவ்வளோ மீனு…எப்பாடி….அவங்க பாத்த வேலையும் அந்தமாதிரி…

கடைசில பயலுக்கு குஷ்டரோகம் வந்திருச்சி…எத்தன  பேரு வயித்தெரிச்சலோ…  ஆமா  இவன் போற வழி ல  எத்தன வைக்கோல் வண்டி போனாலும்  அத்தனையும் குடசாச்சு விட்டுறுவான்.
பொண்டாட்டி வேறு ஆம்படையான் பாத்தாள்…இவனுக்கு தெரிஞ்சு போச்சு வெண்ணாத்துல கொண்டுவந்து ஆள  காலிப்பண்ணி தூக்கிபோட்டுட்டு போயிட்டான்.

நாடு சுதந்திதரத்துக்கு முன்  பிறந்த தற்பொழுது வாழும் பெரியவர் ஒருவரின் கதையாடல் தான் மேற்சொன்னது.

பொம்பள பொறுக்கிய இருந்திருப்பாரு அதனால  குஷ்டரோகம் வந்திருக்கும் என்று கேட்க…

என்னன்னு தெரியல….
கும்பகோணத்துல அப்ப நிறைய தேவடியா வீடுகள் உண்டு பிரியப்பட்டவங்க தெரியாம  போயிட்டு வந்துருவானுங்க…
இன்னொருத்தன் பொண்டாட்டிய  பாக்கறதெல்லாம் அப்பரொம்பகம்மி…சமுதாயத்துல அசிங்கம் சொல்லிட்டு  அத செய்யவே மாட்டானுங்க…

என் கம்மாணாட்டி வீட்டுல இருக்கற பொஞ்சாதி பாக்கமுல்லயாம் …இவருக்கு இன்னொரு வீடாம்.. என்று திட்டுவார்களாம்.

அப்போ எல்லா பொருளும் வெல ரொம்பவும் கம்மி..சுதந்திரம் அடைஞ்சுது ரெண்ட அனா வித்த ஆட்டுகறி இன்னிக்கு கிலோ இருநூற்றி அம்பது ம்ம்ம்….என்ன செய்ய….



Thursday, June 02, 2011

தயாநிதி நீங்களுமா இப்படி??????


தயாநிதிமாறன் ஊழல்செய்தி இன்றைய செய்திதாள்களின் ஹா  ட். அவருடைய  தந்தை முரெசாலிமாறன் சொன்னதாய் நான் படித்தது ஏனோ   நினைவுக்கு வந்தது.

முரெசொலி மாறன்  தன் மகன்களிடம் சொ ன்னது இது தானாம். ” உன் ஊ ரில் நீ ஒரு பழையஇரும்புகடை வைத்து பிழைப்பு நடத்தினாலும் ஊ ரிலேயே சிறந்த பழைய இரும்புகடை  எதுவென்றால் அது உன்னுடையதாகதான் இருக்கவேண்டும்.”


தயாநிதி தகவல்தொடர்பு அமை ச்சராக இருந்தகாலக்கட்டத்தில்  அத்துறைப் பெற்றவளர்ச்சியை பார்த்தப்பொழுது முரெசொலிமாறன் சொன்னதை நினைவில்கொண்டு தயாநிதியின்செயல்களை பெருமையுடன் பார்ப்பதுண்டு.

தயாநிதி தந்தையின் சொல்லை காப்பாற்றுகிறார். அமை ச்சராக இருந்தால் இப்படியல்லவோ   இருக்கவேண்டும் என்றும் நினைத்ததுண்டு ஆனால் அதற்கு பின்னால் இன்றைய செய்திதாள்களில் தயாநிதியை ப்பற்றிய செய்தியை  ப்படித்தவுடன் எனக்குள் நானே வெட்கபட்டேன்.

தயாநிதியின் ஊழல்செய்தி அறிய இச்சுட்டியை காண்க….


தயாநிதி நீங்களுமா இப்படி??????

Wednesday, June 01, 2011

காலம் எழுதும்



காலம் எழுதும்
ஓர்
முடிவின் ஆரம்பம்
காலம் எழுதும்
ஓர் தொடக்கத்தில்
முடிவு
செயல் களின்
இணை  ப்பில்
உருவாகும் கருவாய்
புதியன  பல
ஒன்றாய்
பலவாய்
ஒன்றுக்கு  ஒன்று
தொடர்பாய்
தெரிந்தும்
தெரியாமலும்
காலம் செலுத்தும்
கால  ஓடத்தை....

LinkWithin

Related Posts with Thumbnails