Tuesday, November 30, 2010
மௌனம் ?
நீண்ட மௌனம்
காலம் கரைதலில்
உண்டான அர்த்தங்கள்
பல
மனது பேசியது
தொடர்புடையவர்கள்
தொடர்பு அற்றவர்கள்
முன்அறிவிப்பு
சொல்லாது வர
அன்பு காட்டி
சண்டை போட்டு
கட்டி புரண்டு
கோபம் காட்டி
சமாதானம் செய்து
தனித்திருத்தலில்
மனதுடன் பேச்சு
மௌனம்?
பகல் கனவு..
Sunday, November 28, 2010
பெண் பார்க்க போறீங்களா...
சமுதாயபழக்க வழக்கங்களில் ஆண் , பெண் உறவுகள், நட்பு , தொடர்புகள் என்னதான் மாறினாலும் பாரம்பரியத்தை கட்டி காக்கும் கிராமங்கள் இன்னும் இந்தியாவில் இருக்கவே செய்கின்றன.
ஆண் திருமண வயதை எட்டியவுடன் நெருங்கிய சொந்தம் தூரத்து சொந்தம் என்று ஆணை ப் பெற்ற தாயின் பார்வை செல்லும் தன்னுடைய வசதிக்கு நிகராக இருந்தால் மட்டுமே பேச்சு தொடங்கும்.
தானாக பெண் கொடுக்க முன் வந்தால் கூட “ எம் புள்ள புதுசொந்தம் வேணுங்கிறான் என்று சொல்லி தவிர்த்து விடுவார்கள்.
பெரும் சொத்துகாரர்கள் தான் அவர்கள் தன்னுடைய பையனுக்கு பெண் தேடினார்கள். சொந்தத்தில் அமைந்த ஒருபெண் முடிவு சொல்கிறேன் என்று சொல்லி இழுத்தடித்து கடைசியில் இல்லை என்று சொன்னார்கள்.
நிராகரிக்க பலகாரணங்கள் இருந்தது.
நல்லபடியாக பெண் வாழ வேண்டும் என்று நல்லெண்ண அடிப்படையில் அறிந்தவர்களிடம் தெரிந்தவர்களிடம் விசாரித்து யாரோ ஒருவர் சொல்லும் வாதங்களின் அடிப்படையில் மாப்பிள்ளை நிராகரித்தல் இருக்கும்.
பெற்றோர்கள் சொன்னதற்காக கழுத்து காட்டி கயிறு கட்டிய ஒவ்வொரு பெண்ணின்வாழ்க்கையும் நல்லபடியாக அமைந்ததும் உண்டு. அமையாததும் உண்டு.
புரோக்கரின் மூலமாக வேறொரு பெண்ணின் ஜாதகம் பார்த்து பொருந்தி போக பெண் பார்க்கும் படலம் மாப்பிள்ளை பார்க்கும் படலம் முடிந்து ம் முடிவு சொல்லாது பெண் வீட்டார்கள் முடிவு சொல்லாது இழுதடிக்க மாப்பிள்ளை வீட்டாருக்கு அவசரம்.
மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் அடுத்த மாதம் அடுத்த மாதம் மூன்று மாதங்கள் ஆக பையனுக்கு உள்ளுக்குள் கோபம்.
கடைசியாக பெண் ணின் பாட்டி மாப்பிள்ளை பார்க்க வந்து வீட்டில் இருக்கும் குறைகளை சுட்டி காட்டியவுடன் மாப்பிள்ளைக்கு வந்தது கோபம்.
பெற்றோர்கள் தடுத்தும் மாப்பிள்ளை வேகமாய் பேச
நான் வர்றேங்க என்று சொல்லி சென்றவர்தான்.
மாப்பிள்ளை வீட்டார் புரோக்கர் இடத்தில் வேறு ஜாதகம் கேட்டிருந்தார்கள்.
Friday, November 26, 2010
தேடுதலில் தொலையும் வாழ்க்கை
தேடுதலில்
தொலைகிறது
வாழ்க்கை
காலையில்
தொடங்கிய
மழை விடாது
பெய்தது
பசிக்க தவறாத
உடல்
உணர்த்திய அறிவு
பையில் காசு
உணவு தேடுகையில்
எரிய
மறுந்துப்போன
அடுப்புகள்
கடையில் தூங்கிய
பூனை
மழை பெய்கிறது
விட்டு விட்டு
வந்த மின்சாரம்
வராது நிற்க
இருளில் ழுழ்கிய
வீடு
தீக்குச்சிகள்
எரிந்த ஒலியில்
சிமில் விளக்கின்
தேடல்
வெளிச்சத்தில்
தூங்கிய குழந்தை
இருளில் முழித்து
வீறிட
பசியா…
பயமா…
உண ர்வு தேடலில்
தாய்பரிதவிக்க
தந்தை
சிமில் விளக்கின்
தேடுதலில்…
Labels:
கவிதை,
கவிதை மாதிரி,
தேடுதல்,
வாழ்க்கை
Subscribe to:
Posts (Atom)

