Wednesday, May 25, 2011

பொய் காளை


இரண்டுகால்
பாய்ச்சலில்
வலம் வந்த
காளைமாடு
தாள சத்தம்
வேகம் எடுக்க
ஆ டியது ஆடியது
கால்களின் சலங்கைகள்
சல..சலக்க..
ஓடியது  ஓடியது
கூடியிருந்தவர்களின்
மகிழ்ச்சிக்காய்
ஆ டியது
இரவு பத்துக்கு
சுமந்த வேடம்
அதிகாலை ஐந்துக்கு
கலைக்கப்பட்டு
வாங்கபோகும்
காசுக்காய்
காத்திருந்த
பொய்காளை…..

தமிழால் தப்பிக்க நினைக்கும் முன்னாள் முதல்வர்.


தோ்தல் முடிவுகள் தி.மு.க.  எதிராக அமைந்ததும் ஒற்றைவரியில் தன்னுடைய கருத்தை  வெளியிட்டு அமைதியான  முன்னாள் முதல்வர் தனது மகள் கனிமொழி
கைதினால் ஒரு நீண்ட  அறிக்கையை  வெளியிட்டுள்ளார்.


முன்னாள் முதல்வரின்  அறிக்கையை இச்சுட்டியில் காண்க…

தான் பிறந்தது வள ர்ந்தது சம்பாதித்தது எப்படி?  என திரும்பவும் தமிழக மக்களுக்கு தான் எப்படி என்பதை உண  ர்த்த கடமைப்பட்டுள்ளார்.

காலங்கள் மாற மக்களின் மனோ பாவமும் மாறுகிறது. தன்னுடைய தமிழால்(அறிக்கையால்) தமிழக மக்களின் மனதை மாற்ற முயல்கிறார் அல்லது சமாதானம் செய்யமுயல்கிறாரா தெரியவில்லை???!!!

இவருடைய அறிக்கையை அவருடைய கழக கண்மணிகளே நம்பாதபட்சத்தில் தமிழக மக்கள் எவ்வாறு நம்புவார்கள்.

தற்பொழுது ஒவ்வொரு குடும்பத்தில் படித்த இளை ஞ ர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் மூலமாகவே 2ஜி ஊழல் படிக்காதவர்களையும்  சேர்ந்தது உண்மை.

முன்னாள் முதல்வரின் குடும்பவாரிசுகளுக்கு உண்டான சொத்துபட்டியலை   இச்சுட்டியில் காண்க…

http://savukku.net/home/857-2011-05-21-06-43-43.html

Saturday, May 21, 2011

நடுத்தர வர்க்கம்


நடுத்தரவர்க்கத்தினனாய்  ஓடும் வாழ்வு. சமுதாயகட்டமைப்பின் சட்டதிட்டங்களுக்கு கட்டுபட்டு வாழும்போது பெரிதும் குறுக்கீடாய் அமை வது அவர் அவர்களது சுயமரியாதை.


எதைப்பற்றியும் அலட்டி கொள்ளாத கீழ்தட்டு மக்களாய் இருக்கவேண்டும் அல்லது காசைக்காட்டி வாயைமூடும் பெரும்தனக்காரர்களாய் இருக்கவேண்டும் என்ற நடுத்தரவர்கத்தின் முனுமுனுப்புகள் கேட்டுக் கொண்டேதான் இருக்கும்.

தன்னுடைய   வழி என்பதைவிடவும் தன்சுதந்திரம்  என்றெல்லாம் பார்க்காது  அருகில் உள்ளவர்கள் என்னசொல்வார்களோ  என்ற மற்றவரின் சொல்லுக்கு மதிப்பு கொடுப்பதில் நடுத்தரவர்க்கம் என்றும் நடுத்தரவர்க்கமே…

நட்டத்திலும் துன்பத்திலும் யாரும் பங்கெடுக்கமுன்வரமாட்டார்கள். அவர்கள் வார்த்தை தான் வேதாந்தமாய்  வாதமாய் முன்வை க்கப்படும்  .

எவ்வளவு புரிதல்களோ டு எடுத்து சொ ன்னாலும் அவர்களுக்கு உரிமையுடைகளின் வார்த்தைகள் குப்பை தான்.
இன்றளவிலும் நடுத்தரவர்க்கங்களில்  நடக்கும் குடும்ப சண்டைக்கு மற்றவர்களின் வார்த்தையும் ஒரு காரணம்.

நடுத்தரவர்க்கத்தின் பிரச்சனை  க்கு மிகமுக்கியபங்கு பொருளாதாரம். வரும் வரவு அறிந்து செலவு செய்யதெடங்கினால் இன்றைய சமுதாயத்தின் கவர்ச்சியான அம்சங்களை பாதிக்கு மேல் இழக்கதொடங்கினால் ஏதோ  குடும்ப வண்டியை ஓட்டலாம்.

குடும்பநபர்களின் அவசியங்களும் ஆசைகளும் எவ்வளவு தான் தடைபோடமுடியும் என்றகோண  த்தில் ஒவ்வொரு பிரச்சனையும் அணுக ஆ ரம்பித்தால் நடுத்தரவர்க்கத்தின் கடன் இல்லாத வாழ்வு என்பது ஆச்சர்யம் தான்.

நடுத்தரவர்க்கம் என்பது எப்பொழுதும் ஆச்சர்யமும் அவல மும் நிறைந்த வர்க்கம் தான்.

இன்பங்களும் துன்பங்களும் முழுவதுமாய் அனுபவிக்க கூடிய பக்குவம் படைத்தவர்கள் நடுத்தரவர்க்கம்.

LinkWithin

Related Posts with Thumbnails